என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young woman molested"

    • ஹரிஷ் மற்றும் பிரமோத் இளம்பெண்ணிற்கு அடிக்கடி போன் செய்து தொல்லை கொடுத்தனர்.
    • இளம்பெண் வர மறுப்பு தெரிவித்ததால் இருவரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கி துன்புறுத்தினர்.

    தெலுங்கானா மாநிலம், சூர்யா பேட்டை, தருண் நகரை சேர்ந்தவர் ஹரிஷ். இவரது நண்பர் பிரமோத். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி வந்தனர்.

    அந்த தோழியுடன் வேலை செய்யும் இளம்பெண் அறிமுகமானார்.

    ஹரிஷ் உள்ளிட்ட 4 பேரும் அடிக்கடி சினிமாவுக்கு செல்வது ஊர் சுற்றுவது என இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிறந்தநாள் விருந்து வைப்பதாக கூறி இளம்பெண்ணை ஹீஷராபாத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போது இளம்பெண்ணை வற்புறுத்தி மது குடிக்க வைத்தனர்.

    இளம்பெண்ணிற்கு போதை ஏறியதால் மயக்கம் அடைந்தார். அப்போது ஹரிஷ் மற்றும் பிரமோத் அவரை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    மேலும் இளம்பெண்ணுடன் நிர்வாணமாக இருக்கும் வீடியோ மற்றும் போட்டோக்களை தங்களது செல்போனில் பதிவு செய்து கொண்டனர்.

    இளம்பெண் மயக்கம் தெளிந்து கண்விழித்து பார்த்த போது நிர்வாண நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து நண்பர்களிடம் கேட்டபோது அவர்கள் நிர்வாணமாக வீடியோ போட்டோ எடுத்து வைத்து இருக்கிறோம். இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டினர். மேலும் நாங்கள் கூப்பிடும் போது வரவேண்டும், பணம் தர வேண்டும் என மிரட்டினர்.

    ஹரிஷ் மற்றும் பிரமோத் இளம்பெண்ணிற்கு அடிக்கடி போன் செய்து தொல்லை கொடுத்தனர். இளம்பெண் வர மறுப்பு தெரிவித்ததால் இருவரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கி துன்புறுத்தினர்.

    இளம்பெண் இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் ஹரிஷ் மற்றும் பிரமோத் அவர்களுக்கு துணையாக இருந்த பெண் தோழி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் தன்னுடைய நண்பர்கள் 3 பேருக்கு போன் செய்து அறைக்கு வரவழைத்தார்.
    • 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் விஜயவாடா பெங்கி சர்க்கிளில் உள்ள ஷாப்பிங் மாலில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

    அங்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வேலை செய்து வருகிறார். பணிக்கு சென்று வரும்போது இளம்பெண்ணுக்கும் வாலிபருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணிடம் நைசாக பேசிய வாலிபர் அவரை கானூர் சனத் நகரில் உள்ள தனது அறைக்கு அழைத்துச் சென்றார். அறைக்குச் சென்றதும் இளம்பெண்ணும் வாலிபரும் சேர்ந்து மது அருந்தினர்.

    இதையடுத்து வாலிபர் தன்னுடைய நண்பர்கள் 3 பேருக்கு போன் செய்து அறைக்கு வரவழைத்தார். 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர். தொடர்ந்து இளம்பெண்ணை அறையில் அடைத்து வைத்து 3 நாட்களாக வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தனர்.

    இதனால் இளம்பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து இளம்பெண்ணை தூக்கி வந்து அங்குள்ள சாலையோரம் வீசிவிட்டு 4 பேரும் தப்பிச் சென்றனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் சாலையோரம் இளம்பெண் படுத்து கிடப்பதை கண்டு பெனுமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் விஜயவாடாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருவள்ளூரில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் சாம்ராஜ், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரைச் சேர்ந்த சீயஞ்சேரி பகுதியைச்சேர்ந்தவர் விஜய் (18). ஆட்டோ டிரைவர். இவருக்கும் காக்களூர் பகுதியைச் சேர்ந்த திருமணமான 26 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

    இந்த நிலையில் இளம்பெண்ணை விஜய் தனது ஆட்டோவில் அழைத்து வந்தார். பின்னர் அவர்கள் தனிமையில் இருந்தனர்.

    அப்போது அங்கு விஜய்யின் நண்பர்களான சாம்ராஜ், சதீஷ் ஆகியோரும் அங்கு வந்து தங்களது ஆசைக்கு இணங்கும்படி இளம்பெண்ணை வற்புறுத்தினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் சாம்ராஜ், சதீஷ் ஆகியோர் சேர்ந்து இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    பின்னர் இதுபற்றி வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    தனக்கு நேர்ந்த கொடுமையால் இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் புள்ளரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் சாம்ராஜ், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    திருவள்ளூரில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் விசாரணையில் 4 பேரில் ஒருவருக்கும், புகார் செய்த இளம்பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது.
    • சம்பவத்தன்று வாலிபர் இளம்பெண் வீட்டிற்கு சென்ற போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஒரு போன் வந்தது. அதில் பேசிய இளம்பெண் ஒருவர், நான் தனியாக வீட்டில் இருந்த போது எனது வீட்டிற்கு வந்த வாலிபர்கள் 4பேர் என்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததுடன் எனது வீட்டில் இருந்த 3பவுன் நகை, ரூ.20ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த நல்லூர் போலீசார் உடனே அந்த இளம்பெண் வசித்து வரும் விஜயாபுரம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளம்பெண் கூறிய அடையாளம் மூலம் அப்பகுதியை சேர்ந்த 4 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் 4 பேரில் ஒருவருக்கும், புகார் செய்த இளம்பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று அந்த வாலிபர் இளம்பெண் வீட்டிற்கு சென்ற போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இளம்பெண், வாலிபரிடம் இருந்த பணத்தை பறித்து விட்டு அனுப்பியுள்ளார். இது பற்றி அந்த வாலிபர் தனது நண்பர்கள் 4பேரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இளம்பெண்ணிடம் இருந்து நகை-பணத்தை பறிக்க திட்டமிட்ட 4 பேரும் நேற்று விஜயாபுரத்தில் இளம்பெண் வசித்து வரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சென்றதும், 4பேரும் இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததுடன், வீட்டில் இருந்த 3பவுன்நகை, ரூ.20ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். போலீசார் விசாரணையில் 4 பேரும் சிக்கிக்கொண்டனர்.

    தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் இந்த சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    • நடிக்க செல்லும் முன்பு அது பற்றி பேசவேண்டும் என ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வருமாறு இளம்பெண்ணை அழைத்தார்.
    • சினிமா வாய்ப்பு தராதது குறித்து கேட்டால் மிரட்டுகிறார்கள்.

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஒருவர், தனக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறினார். நடிக்க செல்லும் முன்பு அது பற்றி பேசவேண்டும் என ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வருமாறு அழைத்தார்.

    அங்கு சென்ற என்னை அவரும், அவரது நண்பரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன்பின்பு அவர்கள் எனக்கு சினிமாவில் வாய்ப்பு தரவில்லை. இதுபற்றி கேட்டால் அவர்கள் என்னை மிரட்டுகிறார்கள். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இளம்பெண் தனது உறவினர்களை அழைத்து அன்று இரவே வீட்டை காலி செய்து சென்று விட்டார்.
    • பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மநபர்கள் கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை சேடர் தெருவை சேர்ந்தவர் அருள்செல்வன் (வயது 56). இவர், பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு சுல்தான்பேட்டையில் உள்ளது.

    இந்த வீட்டை லாரி டிரைவர் ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். இவர் கடந்த வாரம் அவர் வெளிமாநிலத்துக்கு லாரியை வாடகைக்கு ஓட்டிச்சென்றார். இதனால் வீட்டில் இவரது மனைவி, தனது குழந்தையுடன் தனியாக இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணிக்கு மர்மநபர்கள் 5 பேர் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தில் கர்சிப் கட்டிக்கொண்டு வீட்டிற்குள் புகுந்தனர். வீட்டில் அந்த பெண் தனது குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது சத்தம் கேட்டு எழுந்த அந்த பெண் வீட்டின் உள்ளே 5 பேர் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மர்மநபர்கள் 5 பேர் , திடீரென அந்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அப்போது அலறி அடித்துக் கொண்டு அவர்களிடம் இருந்து தப்பி தெருவில் வந்து கூச்சலிட்டார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் தங்களது வீடுகளில் இருந்து வெளியே வரவே சுதாகரித்துக்கொண்ட 5 பேர் தங்களது மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பி ஓடி விட்டனர்.

    இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் தனது உறவினர்களை அழைத்து அன்று இரவே வீட்டை காலி செய்து சென்று விட்டார். இதனால் சுல்தான்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் அருள்செல்வன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த பகுதியில் வைத்திருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவான வீடியோ ஆதாரத்துடன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற 5 நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    அதன்பேரில் பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மநபர்கள் கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    இரவு நேரங்களில் பகவதி அம்மன் கோவில், சந்தை வளாகம் மற்றும் சேடர் தெரு ஆகிய பகுதிகளில், மர்மநபர்கள் சாலையிலேயே அமர்ந்து மது அருந்துகின்றனர். இவர்களை தட்டிக் கேட்டால் பொதுமக்களை மிரட்டுகின்றனர்.

    பாதிக்கப்பட்ட அந்த பெண் இந்த பகுதியில் தகுந்த பாதுகாப்பு இல்லை என உடனடியாக வெளியேறி விட்டார். பரமத்திவேலூர் போலீசார் இரவு நேரங்களில் இப்பகுதியில் ரோந்து வரவேண்டும். அசம்பாவிதம் ஏற்படும் முன் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பெண்ணிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக விக்னேஷ் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய வாலிபரை கைது செய்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள நம்மோன்காடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது21). இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். மலைதாங்கிபுரம் பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவரும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவர்கள் இருவரும் திருப்பூரில் வேலை பார்த்து வந்ததால் நட்பாக பழகி வந்தனர். பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் அவர்கள் பல இடங்களுக்கு சென்று சுற்றியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் விக்னேஷ், அந்த பெண்ணிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனால் அந்த பெண்ணை விக்னேஷ் கோட்டப்பட்டி அருகேயுள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணிடம் விக்னேஷ் உல்லாசமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

    பின்னர் அந்த பெண்ணிடம் சரியாக பேசவில்லை. இது பற்றி அந்த பெண் கேட்டபோது உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று விக்னேஷ் கூறியுள்ளார்.

    இதனால் அந்த பெண் வீட்டில் கதறி அழுதார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் கூறினார். இதனை கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய வாலிபரை கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த சில நாட்களுக்கு முன்புதான், நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீலின் காதலிக்கு அவர் ஏற்கனவே திருமணமானவர் எனவும், அவருக்கு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.
    • விசாரணை நடத்திய போலீசார் நிகுஞ்ச் குமாரை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    சூரத்:

    குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீல்.

    நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீலுக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணிடம் நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீல் தனக்கு திருமணமானதை மறைத்து பழகினார். இந்த பழக்கம் காதலாக மாறியது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து கொண்டனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்புதான், நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீலின் காதலிக்கு அவர் ஏற்கனவே திருமணமானவர் எனவும், அவருக்கு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.

    இதை அறிந்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார். நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீலுடன் இருந்த காதலை முறித்து கொண்டார். மேலும் அவரை சந்திக்கவும் மறுத்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீல் சம்பவத்தன்று, அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அவரது அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடியையும் வைத்தார். இதில் உடலில் எரிச்சல் ஏற்பட்டு அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி சூரத் போலீசில் அந்த பெண் புகார் செய்தார். அதில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, தனது ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் நிகுஞ்ச் குமாரை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விப்பேடு பகுதியை சேர்ந்த தென்னரசு உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • குற்றவாளி தென்னரசுவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம் பெண்ணை மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விப்பேடு பகுதியை சேர்ந்த தென்னரசு உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் ஏற்கனவே 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் இந்த கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியான தென்னரசுவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதைத்தொடர்ந்து குற்றவாளி தென்னரசுவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை சிறைத்துறை அதிகாரிகளுக்கு காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழங்கினர்.

    • இளம்பெண் தனது காதலன் முருகேசனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி வந்தார்.
    • முருகேசன் கடந்த 1 மாதத்துக்கு முன்பு அவரது உடமைகளை எடுத்துக்கொண்டு காதலியை தவிக்க விட்டு மாயமானார்.

    கோவை:

    கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண்.

    இவருக்கு கடந்த 1 ஆண்டுக்கு முன்பு கோவை சூலூரை சேர்ந்த சமையல் மாஸ்டர் முருகேசன் (வயது 35) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் செல்போன் மூலமாக பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் காதலர்கள் 2 பேரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு நேரில் சந்தித்தனர். அப்போது 2 பேருக்கும் பிடித்து போனதால், திருமணம் செய்து கொள்வதற்கு அவர்கள் முடிவு செய்தனர்.

    இதையடுத்து முருகேசன் சூலூரில் வீடு வாடகைக்கு எடுத்து இளம்பெண்ணுடன் தங்கினார்.

    அப்போது அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதனால் அவர் 5 மாத கர்ப்பமானார். அவர் தனது காதலன் முருகேசனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி வந்தார். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

    இந்த நிலையில் முருகேசன் கடந்த 1 மாதத்துக்கு முன்பு அவரது உடமைகளை எடுத்துக்கொண்டு காதலியை தவிக்க விட்டு மாயமானார். இதனால் அதிர்ச்சியான இளம்பெண் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது பேசிய முருகேசன் தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறியதுடன், அந்த பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தையும் அனுப்பினார். இதனை பார்த்து இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.

    தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவான முருகேசனை தேடி வருகிறார்கள்.

    • கொலை செய்யப்பட்டவர் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பிற்காக சென்று வந்துள்ளார்.
    • இளம்பெண்ணை கடந்த 15 நாட்களாக தினேஷ் என்ற வாலிபர் பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    ஜெய்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க தலித் பெண் ஒருவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கொலை செய்யப்பட்டவர் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பிற்காக சென்று வந்துள்ளார். அவரை கடந்த 15 நாட்களாக தினேஷ் என்ற வாலிபர் பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கம்ப்யூட்டர் வகுப்பிற்காக அந்த பெண் சென்ற போது கஜூவாலா போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் மனோஜ் குமார் மற்றும் பாகீரத்குமார் என்ற 2 போலீஸ்காரர்கள் மற்றும் தினேஷ் உள்ளிட்ட கும்பலால் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை எடுக்க கூடாது என பெண்ணின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு தேஜஸ்வனி கவுதம் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    முதல் கட்டமாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களான மனோஜ் குமார், பாகீரத் குமார் ஆகிய 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பெண்ணின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • காட்டுப் பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று இளம்பெண்ணை ஆட்டோ டிரைவர் பலாத்காரம் செய்துள்ளார்.
    • பாதிக்கப்பட்ட இளம்பெண் குரும்பூர் போலீசில் புகார் செய்தார்.

    குரும்பூர்:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த 25 வயது மதிப்புள்ள இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் குரும்பூருக்கு வந்துள்ளார்.

    பின்னர் குரும்பூர் பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் ஆட்டோவில் வந்த டிரைவர் அவர் செல்ல வேண்டிய முகவரிக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் இளம்பெண் கூறிய முகவரிக்கு செல்லாமல் மாறாக ஏரல் சாலையில் அழைத்து சென்றுள்ளார்.

    ஏரல்-குரும்பூர் சாலை மறுகால் ஓடை பாலத்தின் கீழ் காட்டுப் பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று இளம்பெண்ணை ஆட்டோ டிரைவர் பலாத்காரம் செய்துள்ளார். அவரை தொடர்ந்து அந்த வழியாக மோட்டார் கை்கிளில் வந்த வாலிபர் ஒருவரும் அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார். பின்னர் ஆட்டோ டிரைவரும், மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் குரும்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா விசாரணை நடத்தினார். அதில் இளம்பெண்ணை ஆட்டோவில் அழைத்து சென்று கற்பழித்தது ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளம் சன்னிதி தெருவை சேர்ந்த அய்யப்ப நயினார் மகன் முத்துராம்குமார் என்ற தங்கம் (வயது 22) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குரும்பூர் நெட்டையன்காலனியை சேர்ந்த 4 வாலிபர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×