search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    டுவிட்டரில் அமலுக்கு வரும் புதிய விதி - இனிமேல் அப்படி செய்ய முடியாது!
    X

    டுவிட்டரில் அமலுக்கு வரும் புதிய விதி - இனிமேல் அப்படி செய்ய முடியாது!

    • அடுத்த சில வாரங்களில் இடையூறு படிப்படியாக குறையும்.
    • இதற்கான அப்டேட் வரும் வாரங்களில் வெளியாகும் என்று எலான் மஸ்க் அறிவிப்பு.

    டுவிட்டர் வலைதளத்தில், பயனர்கள் பின்தொடராதவர்களுக்கு (non-followers) மெசேஜ் அனுப்புவதற்கான வசதி விரைவில் நிறுத்தப்படுகிறது. டுவிட்டர் தளத்தில் ஸ்பேம் மற்றும் ஏஐ பாட்களால் குறுந்தகவல் சேவையில் அதிக இடையூறு ஏற்படுவதாக பயனர் ஒருவர் குற்றம்சாட்டி இருந்தார்.

    இதோடு தனக்கு வந்த குறுந்தகவல்களின் ஸ்கிரீன்ஷாட்டையும் அவர் பகிர்ந்து இருந்தார். இதற்கு எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார். அதில், அடுத்த சில வாரங்களில் குறுந்தகவல் மூலம் ஏற்படும் இடையூறு படிப்படியாக குறையும் என்று எலான் மஸ்க் தெரிவித்தார். இதற்கான அப்டேட் வரும் வாரங்களில் வெளியாகும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் டுவிட்டர் தளத்தில், பயனர்கள் பின்தொடராத நபர்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடியாது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் டுவிட்டர் புளூ சந்தா வைத்திருப்பின், பின்தொடராதவர்களுக்கும் குறுந்தகவல் அனுப்ப முடியும்.

    மேலும் டுவிட்டர் தளத்தில் பயனர்கள் அனுப்பும் குறுந்தகவல்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது நாள் ஒன்றைக்கு பயனர்கள் 500 குறுந்தகவல்களை மட்டுமே அனுப்ப முடியும்.

    Next Story
    ×