search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆப்பிளை பின்தள்ளி முதலிடம் பிடித்த சாம்சங்
    X

    ஆப்பிளை பின்தள்ளி முதலிடம் பிடித்த சாம்சங்

    சர்வதேச சந்தையில் ஏப்ரல் 2018 ஸ்மார்ட்போன் விற்பனை குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X அறிமுகம் செய்யப்பட்டது முதல் சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையாகி வந்தது. இந்நிலையில், ஐபோன் X ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக புதிய ஸ்மார்ட்போன் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஏப்ரல் 2018-இல் அதிகம் விற்பனையாக ஸ்மார்ட்போனாக இருக்கிறது. கவுன்ட்டர்பாயின்ட் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஆசியா பசிபிக் மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில்அதிகரித்து இருக்கிறது. இவை முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களை பிடித்திருக்கிறது. 



    ஏப்ரல் 2018 ஸ்மார்ட்போன் விற்பனையின் முன்னணி இடங்களில் சியோமி இடம்பெற்றிருக்கிறது. அந்நிறுவனத்தின் ரெட்மி 5ஏ, ரெட்மி 5 பிளஸ்/நோட் 5 ஸ்மார்ட்போன்கள் முறையே ஆறு மற்றும் எட்டாவது இடங்களை பிடித்துள்ளது.

    சீனா மற்றும் இந்தியாவில் தொடர்ந்து அபார வளர்ச்சியை சியோமி பதிவு செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தை பொருத்த வரை அந்நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக விற்பனையில் சரிவை சந்தித்து வருகிறது. எனினும் சர்வதேச அளவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் டாப் 5 இடங்களை ஆக்கிரமித்து இருக்கிறது.

    அறிமுகம் செய்யப்பட்டு ஒரு ஆண்டுகள் நிறைவுற்ற நிலையிலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 ஆசிய பசிபிக் மற்றும் வட அமெரிக்க பகுதிகளில் அதிகம் விற்பனையாகி வருகின்றன. விற்பனை தொடர்ந்து அதிகரிக்க விலை குறைப்பு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×