என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
பி.எஸ்.என்.எல். இலவச சலுகை செப்டம்பர் வரை நீட்டிப்பு
Byமாலை மலர்29 Aug 2018 10:02 AM GMT (Updated: 29 Aug 2018 10:02 AM GMT)
பி.எஸ்.என்.எல். அறிவித்த 2 ஜிபி இலவச டேட்டாவிற்கான கால அவகாசம் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #BSNL #offers
பி.எஸ்.என்.எல். அறிவித்து வழங்கி வந்த 2 ஜிபி இலவச டேட்டா செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். வழங்கி வரும் 10 பிரபல பிரீபெயிட் சலுகைகளில் வழங்கப்பட்ட டேட்டாவுடன், 2 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. மான்சூன் ஆஃபர் என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட கூடுதல் டேட்டா ஜியோவின் டபுள் தமாக்கா ஆஃபருக்கு போட்டியாக ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த சலுகை ரூ.186,ரூ.429, ரூ.485, ரூ.666 மற்றும் ரூ.999 பிரீபெயிட் ரீசார்ஜ்களில் வழங்கப்படுகிறது. இதே போன்று கூடுதல் 2 ஜிபி டேட்டா ரூ.187, ரூ.333, ரூ.349, ரூ.444 மற்றும் ரூ.448 விசேஷ சலுகைகளிலும் வழங்கப்படுகிறது. உண்மையில் மான்சூன் ஆஃபர் இந்தியா முழுக்க 60 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டது.
தற்சமயம் பி.எஸ்.என்.எல். இதற்கான வேலிடிட்டியை செப்டம்பர் 15 வரை நீட்டித்துள்ளது. இந்த சலுகை பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் பேக்கள் ரூ.186, ரூ.429, ரூ.666 மற்றும் ரூ.999 மற்றும் விசேஷ சலுகைகளான ரூ.187, ரூ.333, ரூ.349, ரூ.444 மற்றும் ரூ.448 வழங்கப்படுகிறது.
இதன்மூலம் ரூ.186 ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக 28 நாட்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட்டு வந்ததுய இதேபோன்று ரூ.444 விலையில் சலுகையை தேர்வு செய்யும் பயனர்களுக்கு தினமும் 6 ஜிபி டேட்டா 60 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் முன்னதாக 4 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது.
2 ஜிபி கூடுதல் டேட்டா மட்டுமின்றி, அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் மற்றும் ரோமிங் அழைப்புகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். சேவையை வழங்கி வரும் அனைத்து வட்டாரங்களிலும் 2 ஜிபி கூடுதல் டேட்டா சலுகை பொருந்தும்.
பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கில் இதுவரை 3ஜி சேவை மட்டுமே வழங்கப்படுகிறது என்பதும் கவனிக்கத்தக்க ஒன்று. மற்ற நிறுவனங்கள் அதிவேக 4ஜி நெட்வொர்க் சேவையை வழங்கி வருகின்றன. பி.எஸ்.என்.எல். சார்பில் அறிவிக்கப்பட்ட இலவச டேட்டா நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜியோ டபுள் தமாக்கா ஆஃபர் ஜூன் 30-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.
ஜியோ இலவசமாக வழங்கிய கூடுதல் டேட்டா பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி அளவு கூடுதல் டேட்டாவினை தினமும் வழங்கிவந்தது. மேலும் ஜியோ பயனர்களுக்கு அதிவேக 4ஜி டேட்டா வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X