ஆன்மிக களஞ்சியம்
- ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகந்நாதர் நின்ற கோலத்தில் உள்ளார்.
- திருப்புல்லாணியில் உள்ள ஜெகந்நாதர் சயன கோலத்தில் உள்ளார்.
இந்தியாவில் ஜெகந்நாதர் என்ற பெயரில் பல தலங்களில் பெருமாள் அருள் பாலித்த போதிலும் பூரி, திருமழிசை, திருப்புல்லாணி ஆகிய 3 ஜெகந்நாதர்கள் உயர்வானவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகந்நாதர் நின்ற கோலத்தில் உள்ளார். இவருக்கு வடக்கு ஜெகந்தாதர் என்று பெயர்.
திருமழிசையில் உள்ள ஜெகந்நாதர் அமர்ந்த கோலத்தில் உள்ளார். இவரை மத்திய ஜெகந்நாதர், பூர்ண ஜெகந்நாதர் என்கிறார்கள். இவருக்கு திருமஞ்சனம் செய்து துளசி அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்தது எல்லாம் நடைபெறும்.
திருப்புல்லாணியில் உள்ள ஜெகந்நாதர் சயன கோலத்தில் உள்ளார். இவரை தெற்கு ஜெகந்நாதர் என்கிறார்கள்.