ஆன்மிக களஞ்சியம்

பணமில்லாமல் பசு தானம்

Published On 2023-05-30 10:22 GMT   |   Update On 2023-05-30 10:22 GMT
  • கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு.
  • கோ என்றால் பசு இந்தா என்றால் வாங்கிக்கொள் என்று பொருள் வரும்.

கோவிந்தா என்று சொன்னால் போனது வராது என்று பொருள்படும் இதனால்தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், பணம் கோவிந்தா தானா? என கேட்கும் வழக்கம் வந்தது.

கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு. இதை கோ இந்தா என்றும் பிரிக்கலாம். அப்போது கோ என்றால் பசு இந்தா என்றால் வாங்கிக்கொள் என்று பொருள் வரும்.

கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசு தானம் செய்த புண்ணியம் கிடைத்துக்கொண்டே இருக்குமாம். எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.

Tags:    

Similar News