ஆன்மிக களஞ்சியம்
null
"அடிக்கொரு லிங்கம்,அடித்துகள் பட்ட இடமெல்லாம் கோடி கோடி லிங்கங்கள்"
- பூமியிலேயே மிகப்பெரிய சுயம்பு லிங்க மூர்த்தியாக திருவண்ணாமலை கூறப்படுகிறது.
- மலையின் மேல் உள்ள ஒவ்வொரு கல்லும் ஒரு சுயம்புலிங்கமே!
ஆதி சிவன் தன் திருமேனியையே மலையாகக்கொண்ட இத்தலம் தற்போது கல்மலையாகக் காட்சியளிக்கின்றது.
ஆனால் அதனுள் பொதிந்து கிடக்கும் ஆன்மீக பொக்கிஷங்களோ ஏராளம் ஏராளம்.
பூமியிலேயே மிகப்பெரிய சுயம்பு லிங்க மூர்த்தியாக திருவண்ணாமலை கூறப்படுகிறது.
மலையின் மேல் உள்ள ஒவ்வொரு கல்லும் ஒரு சுயம்புலிங்கமே!
எனவேதான் திருவண்ணாமலை தலத்தில் உள்ள சிறு மண்ணையோ, கல்லையோ எவரும் எங்கும் எடுத்துச் செல்லக்கூடாது என்பார்கள்.
"அடிக்கொரு லிங்கம், அடித்துகள் பட்ட இடமெல்லாம் கோடி கோடி லிங்கங்கள்" என்று ஸ்ரீஅகஸ்திய கிரந்தம் வர்ணிப்பதன் ஆன்மீக ரகசியம் இதுவே!