ஆன்மிக களஞ்சியம்
- குங்குமத்தை மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தியில் வைப்பது பெண்களுக்கு தெய்வீகப் பண்புகளைப் பெற்றுத் தரும்.
- வசீகரமான தோற்றம் உருவாகும். லட்சுமி கடாட்சம் நிரம்பும். மாங்கல்ய பலம் அதிகரிக்கும்.
ஸ்டிக்கர் பொட்டு வைக்கும் கலாச்சாரம் மிகுதியாகி விட்டதால் தற்போது நெற்றியில் குங்குமம் வைக்கும் பெண்களை பார்ப்பது மிக அரிதாகவே உள்ளது.
குங்குமத்தை மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தியில் வைப்பது பெண்களுக்கு தெய்வீகப் பண்புகளைப் பெற்றுத் தரும்.
வசீகரமான தோற்றம் உருவாகும்.
லட்சுமி கடாட்சம் நிரம்பும். மாங்கல்ய பலம் அதிகரிக்கும்.
தன வசியம்-பண வரவு சித்திக்கும்.
திருஷ்டி, செய்வினைகள் அண்டாது.
மாந்த்ரீக பாதிப்பு விலகும்.
கிருமி நாசினிகளான படிகாரம், சுண்ணாம்பு, தண்ணீர், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கும் குங்குமத்தை நெற்றியில் வைப்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.
தொற்று நோய் கிருமிகளும் நெருங்காது. உடல் உஷ்ணம் குறையும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
தீய எண்ணங்கள் விலகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.