குதூகலம் பொங்கும் கிருஷ்ணர் ஜெயந்தி விழா
- மாயக்கண்ணன் இளமையில் செய்த சேட்டைகளை நினைத்தாலே பரமானந்தத்தை தரும்.
- அவற்றைப் போற்றும் வகையில், பல இடங்களில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று உறியடித் திருவிழா நடத்தப்படும்.
பல ராமனுக்கும், கிருஷ்ணருக்கும் சாந்தி பீவி என்ற முனிவர் ஆயக்கலைகள் அறுபத்துநான்கையும் கற்றுக்கொடுத்தார்.
அதற்கு குருதட்சணையாக, வெகுநாட்களுக்கு முன்பு கடலில் தவறி விழுந்த எனது மகனை உயிருடன் கொண்டு வந்து கொடுங்கள் என்றார்.
நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் எமனிடம் இருந்து குருவினுடைய மகனை மீட்டுக்கொடுத்தனர்.
துவாபரயுக முடிவில் கிருஷ்ணாவதாரம் நிறைவு பெற்றது. இதையெல்லாம் பிரதிபலிக்கும் வகையில் தற்போது கிருஷ்ண ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கிருஷ்ண ஜெயந்தி அன்று வீடுகளில் குதூகலம் நிறைந்திருக்க வாசல் முழுவதும் கோலமிட்டு, வாசலில் இருந்து பூஜை அறை வரை செல்லும் பாதையில் சின்னச் சின்ன காலடிச் சுவடுகளை கோலமிட வேண்டும்.
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பூஜையில் கிருஷ்ணனுக்கு பிடித்த வெண்ணை, அவல் மற்றும் பழங்கள், கார வகைகள் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
மாயக்கண்ணன் இளமையில் செய்த சேட்டைகளை நினைத்தாலே பரமானந்தத்தை தரும்.
அவற்றைப் போற்றும் வகையில், பல இடங்களில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று உறியடித் திருவிழா நடத்தப்படும்.
கண்ணன், முகுந்தன், கோபால கிருஷ்ணன், நந்த கோபாலன் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் குழந்தை கிருஷ்ணனை, கோகுலாஷ்டமி தினத்தன்று நாமும் நம் வீடுகளில் வரவேற்று பூஜை செய்து ஆனந்தம் அடைவோம்.