ஆன்மிக களஞ்சியம்

குலம் செழிக்க ஆடியில் இதை செய்ய மறக்காதீர்கள்

Published On 2024-07-16 11:45 GMT   |   Update On 2024-07-16 11:45 GMT
  • நாட்டில் எத்தனையோ பேர் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் ஏக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
  • உங்கள் சக்திக்கு ஏற்ப அவர்களுக்கு உதவலாம்.

தானம்...

உங்களால் என்ன தானம் செய்ய முடிகிறதோ அதை செய்யுங்கள்.

நாட்டில் எத்தனையோ பேர் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் ஏக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் சக்திக்கு ஏற்ப அவர்களுக்கு உதவலாம்.

ஏழைகளுக்கு உணவு, உடை, தானம் செய்யலாம். நீங்கள் செய்யும் தானம் ஏழை & எளிய மக்களின் மனதில் மகிழ்ச்சியையும், குளிர்ச்சி யையும் ஏற்படுத்த வேண்டும். அந்த மகிழ்ச்சி உங்கள் குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்தும். குலம் செழிக்க கைக் கொடுக்கும்.

இதையடுத்து தர்ப்பணம்...

நாளை நாம் ஒவ்வொருவரும் மறக்காமல் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

ஆண்டுக்கு ஒரு தடவை திதி கொடுத்தாலும் நாளை மறக்காமல் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

நாம் கொடுக்கும் எள்ளும் தண்ணீரும்தான் அவர் களுக்கு உணவு, நம்மை சீராட்டி, பாராட்டி வளர்த்த நம் முன்னோர்களை நாம் பட்டினிப் போடாலாமா?

அது எவ்வளவு பெரிய பாவம்?

இந்த பாவ மூட்டை களை நீக்க மறக்காமல் தர்ப் பணம் கொடுங்கள். 

Tags:    

Similar News