ஆன்மிக களஞ்சியம்

மகாலட்சுமியின் அருளை குறைவின்றி பெற இம்மந்திரத்தைக் கூறுங்கள்!

Published On 2024-05-17 11:39 GMT   |   Update On 2024-05-17 11:39 GMT
  • நிவேதனமாக, சர்க்கரை சேர்ந்த பால் வைத்து வெள்ளிக்கிழமைகளில் சொல்ல ஆரம்பிக்கவேண்டும்.
  • தினமும் 16 முறைக்குக் குறையாமல் சொல்ல வேண்டும். 108 முறை சொல்வது உத்தமம்.

மகாலட்சுமி மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி

ஆகச்ச ஆகச்ச,

மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா

மஹாலக்ஷ்மி மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி

மஹாலக்ஷ்மி ஏஹ்யேஹி

ஏஹ்யேஹி ஸர்வ

ஸெளபாக்யம் மே தேஹி ஸ்வாஹா

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம். கமலே

கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத.

ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்

ஓம் மஹாலக்ஷ்ம்யை நம.

பீஜ மந்திரத்துடன் கூடியவை இந்த மஹா மந்திரங்கள்.

இதில் ஏதேனும் ஒரு மந்திரத்தை மனம் உருகி சொன்னால் சிறப்பான பலன் தரும் என்பது ஐதீகம்.

இதனை சொல்லும் முன், மகாலட்சுமியின் படத்துக்கு பொட்டு வைத்து, பூ சூட்டி, நெய் தீபம் ஏற்றி குல தெய்வத்தை முதலில் வணங்கி அதன் பிறகே, மந்திரம் சொல்லி வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும்.

நிவேதனமாக, சர்க்கரை சேர்ந்த பால் வைத்து வெள்ளிக்கிழமைகளில் சொல்ல ஆரம்பிக்கவேண்டும்.

தினமும் 16 முறைக்குக் குறையாமல் சொல்ல வேண்டும். 108 முறை சொல்வது உத்தமம்.

இப்பூஜையின் நிறைவில் குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளில் ஏதேனும் ஒன்றை தந்து வருவது சிறப்பாகும்.

வீட்டில் மகாலட்சுமி வசம் செய்யும் துளசியுடன் கூடிய மாடம் இருந்தால் இதேபோல் அதற்கு வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது இன்னும் சற்று கூடுதல் பலன் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News