ஆன்மிக களஞ்சியம்

மோகத்தை உண்டாக்குகிற மேகத்தின் கருப்பு கண்ணன்

Published On 2024-06-12 11:08 GMT   |   Update On 2024-06-12 11:08 GMT
  • அப்போது தான் கன்னங்கரேலென்று இருக்கிறதால் கிருஷ்ணன் என்றே பெயர் வைத்துக் கொண்டவன் நம்மிடம் வருவான்.
  • அது வெறுப்பைத் தருகிற கருப்பு அல்ல; மோகத்தை உண்டாக்குகிற மேகத்தின் கருப்பு

'நவநீதம்' என்றால் புதிதாக எடுத்தது என்று அர்த்தம். 'நவ' - புதிதாக; 'நீதம்' - எடுக்கப்பட்டது.

புத்தம் புதிதாகக் காலை வேளையில் பசும்பாலில் உறை குத்தி சாயங்காலமே அந்த தயிரை சிலுப்பி எடுக்கிற வெண்ணை தான் நவநீதம்.

நாமெல்லாம் பசுக்கள். நம் மனசு வெள்ளை வெளேரென்று பாலாக இருக்கணும்.

அப்போது தான் கன்னங்கரேலென்று இருக்கிறதால் கிருஷ்ணன் என்றே பெயர் வைத்துக் கொண்டவன் நம்மிடம் வருவான்.

அது வெறுப்பைத் தருகிற கருப்பு அல்ல; மோகத்தை உண்டாக்குகிற மேகத்தின் கருப்பு, அவனைக் 'கார்வண்ணன்' என்று சொல்வார்கள்.

மேகம் எத்தனைக்கு எத்தனை கருப்போ அத்தனைக்கு அத்தனை அதிகமாக தண்ணீரை கொட்டும்.

அந்த தண்ணீர் கருப்பாகவா இருக்கிறது? இப்படி பரம பிரேம தாரையைப் பிரவாகமா கொட்டுகிறவனே கிருஷ்ணன்.

Tags:    

Similar News