ஆன்மிக களஞ்சியம்
null

மூன்று கிரிவலப் பாதை

Published On 2023-10-12 11:35 GMT   |   Update On 2023-10-17 06:43 GMT
  • தற்காலத்தில் கிரிவலம் வருவது ஒரு பொழுது போக்கு அம்சமாக ஆகிவிட்டது.
  • நீரை தவிர வேறு எதையும் உட்கொள்ளகூடாது எளிய உணவு, குறைந்த அளவில் உட்கொள்ளலாம்.

தற்காலத்தில் கிரிவலம் வருவது ஒரு பொழுது போக்கு அம்சமாக ஆகிவிட்டது.

கிரிவலம் வரும் பொழுது மிகவும் மெதுவாக நடக்க வேண்டும்.

இறை சிந்தனையோ, நாம ஜபமோ இருந்தால் நல்லது.

கர்ப்பிணி பெண் போல நடக்க வேண்டும் என்பார்கள்.

எப்பொழுதும் தன் வயிற்றில் இருக்கும் சிசுவின் மேல் கவனம் இருப்பது போல மந்திரத்தில் கவனமும், சீரான நடையும் இருக்க வேண்டும்.

நீரை தவிர வேறு எதையும் உட்கொள்ளகூடாது எளிய உணவு, குறைந்த அளவில் உட்கொள்ளலாம்.

மலையை ஒட்டி ஒரு காட்டு வழிச்சாலை இன்றும் உண்டு.

தகுந்த வழிகாட்டியுடன் சென்றால் அந்த பாதை எது என புலப்படும் இது உள்வழிப்பாதை.

இது போல மலையின் மேல் பகுதியில் ஒரு கிரிவலப்பாதை உண்டு.

ஒரு சிவலிங்கத்தை கவனித்தீர்கள் என்றால் மேல் பகுதியிலிருந்து கீழ்பகுதி வரை மூன்று வட்டப்பகுதிகள் இருக்கும்.

லிங்கப்பாதை என்ற இந்த தன்மையைத்தான் இந்த மூன்று கிரிவலப்பாதையும் குறிக்கிறது.

ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் 15 லட்சம் பேர் கிரிவலம் வருகிறார்கள்.

பவுர்ணமிக்கு அடுத்த நாள் கிரிவலப்பாதையை பார்த்தால் அவர்களின் பக்தி புரியும்.

முன் காலத்தில் விளக்கு வசதி இல்லை.

அதனால் காட்டுப்பாதையாக இருந்தால் பவுளர்ணமி அன்று மட்டும் வலம் வந்தார்கள்.

தற்காலத்தில் நவீன மின்வசதிகள் உண்டு அதனால் எல்லா நாட்களிலும் வலம் வரலாம்.


Tags:    

Similar News