ஆன்மிக களஞ்சியம்

பிரச்சனைகளை நொடிப்பொழுதில் தீர்க்கும் ராஜகோபால சுவாமி கோவில்

Published On 2024-07-01 11:54 GMT   |   Update On 2024-07-01 11:54 GMT
அனைவரது பிரார்த்தனைகளும் வெகு சீக்கிரத்திலேயே நிறைவேறி விடும் என்பது இந்த ராஜகோபால சுவாமி கோவிலின் விசேஷம்.

கும்பகோணத்தில் உள்ள பெரிய கடைவீதியில் அமைந்த அற்புதமான கோவில். சின்ன கோவில் இது.

இறைவன் திருநாமம் ராஜகோபாலன். தாயார் செங்கமலவல்லி. அமைதியாகவும், கருணையுடன் பொங்குவது போலவும் உருவச் சிலைகள் அமைந்துள்ளன.

யார் என்ன பாவத்தைச் செய்திருந்தாலும், அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் இந்த தலத்திற்கு வந்து எம்பெருமான் ராஜகோபாலனை மனமுருகி பிரார்த்தனை செய்தால் போதும்.

அவர்கள் அனைவரது பிரார்த்தனைகளும் வெகு சீக்கிரத்திலேயே நிறைவேறி விடும் என்பது இந்த ராஜகோபால சுவாமி கோவிலின் விசேஷம்.

இன்னும் சொல்லப் போனால் மன்னார்குடி ராஜகோபால பெருமாளுக்கு என்ன பெருமை உண்டோ அத்தனையும் இந்த கும்பகோணம் ராஜகோபால சுவாமிக்கும் உண்டு.

Tags:    

Similar News