ஆன்மிக களஞ்சியம்

தேவர்களே பைரவரை பூஜிக்கும் கால பைரவாஷ்டமி

Published On 2024-07-01 11:17 GMT   |   Update On 2024-07-01 11:17 GMT
  • தேய்பிறை அஷ்டமி தினத்தன்று செய்யப்படும் பைரவர் வழிபாடு மிகச்சிறந்த நற்பலன்களைத் தரும்.
  • ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமிக்கும் ஒவ்வொரு சிறப்பு பெயர் உண்டு.

கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி திதி, பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும்.

இதனை ருத்ராஷ்டமி தேவாஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்வார்கள். இது தேவர்களே பைரவரை பூஜிக்கின்ற நாள்.

எனவே தேய்பிறை அஷ்டமி தினத்தன்று செய்யப்படும் பைரவர் வழிபாடு மிகச்சிறந்த நற்பலன்களைத் தரும்.

தைமாதம் முதல் துவங்கி ஒவ்வொரு செவ்வாய், சனிக்கிழமையும் பைரவரை வணங்கி பஞ்சதீபம் ஏற்றி, காலபைரவ அஷ்டகம் படித்து பூஜை செய்து வந்தால், எதிரிகள் அழிந்து கடன்கள் தீர்ந்து யம பய மட்டுமல்லாது எவர் பயமுமின்றி நீண்ட நாள் வாழலாம்.

செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமையில் வரும் பரணி, ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திரம் இணைந்த நாள் பைரவருக்கு மிகவும் உகந்த நாளாக கருத்தப்படுகிறது.

12 மாத அஷ்டமி பெயர்கள்

ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமிக்கும் ஒவ்வொரு சிறப்பு பெயர் உண்டு.

மார்கழி மாதம்: திரியம்பகாஷ்டமி,

சித்திரை மாதம்: ஸ்நாதனாஷ்டமி,

வைகாசி மாதம்: சதாசிவாஷ்டமி,

ஆனி மாதம்: பகவதாஷ்டமி,

ஆடி மாதம்: நீலகண்டாஷ்டமி,

ஆவணி மாதம்: ஸ்தானு அஷ்டமி,

புரட்டாசி மாதம்: சம்புகாஷ்டமி,

ஐப்பசி மாதம்: ஈசான சிவாஷ்டமி,

கார்த்திகை மாதம்: சம்புகாஷ்டமி

மார்கழி மாதம்: ஈசான சிவாஷ்டமி,

தை மாதம்: தேவாகாலபைரவாஷ்டமி.

Tags:    

Similar News