ஆன்மிக களஞ்சியம்
null

உருவம் மாறும் தெய்வீக மலை

Published On 2023-10-12 12:45 GMT   |   Update On 2023-10-17 06:32 GMT
  • அக்னிமுக தரிசனம் என்ற ஒரு பகுதியும் கிரிவலப்பாதையில் உண்டு.
  • இங்கு கிரிவலம் வருகையில் அவர்களுக்கு இது அக்னி மலையாகவே காட்சி தரும்.

கிருத யுகத்தில் இருந்து இன்னும் வாழ்ந்து கொண்டிக்கின்ற மகான்கள், ரிஷிகள், தேவர்கள்,கந்தர்வர்கள் போன்றோர்

இங்கு கிரிவலம் வருகையில் அவர்களுக்கு இது அக்னி மலையாகவே காட்சி தரும்.

அதே போல் திரேதா யுக வாசிகள் இங்கு வந்தால் அவர்களுக்கு இது இன்னமும் மாணிக்க மலையாகவே காட்சி அளிக்கும்.

துவாரா யுக வாசிகளுக்கு இம்மலை பொன்மலையாகவே காட்சி தரும், ஏன் மரகத மலை, வைரமலை, சித்ர மலை, ரஜத மலை, வைடூரிய மலையாகவும் காட்சித்தரும்.

அக்னிமுக தரிசனம்

அக்னிமுக தரிசனம் என்ற ஒரு பகுதியும் கிரிவலப்பாதையில் உண்டு.

இங்கு ஹோம வழிபாட்டை மேற்கொள்வோருக்குக் கிட்டும் பலாபலன்களோ சொல்லிலோ, பொருளிலோ அடங்காத மகத்துவத்தைக் கொண்டதாகும்.

ஸ்ரீ பிரம்மமூர்த்தி தனக்குரிய வேள்விகளை இப்பகுதியில்தான் இன்றைக்கும் நிகழ்த்துகின்றார்.

சூரிய பகவானும், தனக்குரிய அக்னி சக்தியை இப்பகுதியிலிருந்து தினமும் தனக்கெனப் பெற்றுக் கொள்கின்றார்.

அஷ்டதிக்கு லிங்கங்களில் ஸ்ரீஅக்னி லிங்க சன்னதியில் கார்த்திகை நட்சத்திரம் தோறும்,

அக்னி பகவானுக்கு உரித்தான செவ்வாய் ஹோரையில் ஹோம வழிபாட்டை மேற்கொள்வோருக்குப் பலவிதமான அற்புதமான பலன்கள் கிடைக்கும்.


Tags:    

Similar News