வார ராசிப்பலன் 13.10.2024 முதல் 19.10.2024 வரை
தொட்டது துலங்கும் வாரம். ராசி அதிபதி சூரியன் நீசம் பெற்றாலும் தன, லாப அதிபதி புதன் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனதிற்கு நிம்மதியும் தன்னம்பிக்கையும் தரும் நிகழ்வுகள் நடக்கும். தைரியம் மிகுதியாக இருக்கும். மனபலம், நிம்மதி கூடும். ஞாபக சக்தி அதிகரிக்கும். ராசிக்கு 5ம்மிடத்தை பாக்கிய அதிபதி செவ்வாய் பார்ப்பதால் அதிர்ஷ்ட பொருள், பணம், உயில் சொத்து கிடைக்கும். சிலர் மன அமைதி மற்றும் நிம்மதிக்காக தீபாவளி விடுமுறையில் தீர்த்த யாத்திரை செல்ல திட்டமிடுவார்கள். சிறிய வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் வசதியான வீட்டிற்கு செல்லலாம். சிலர் தொழிலை ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு மாற்றலாம். வீடு வாகன யோகம் சிறப்பாக அமையும்.
பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். 15.10. 2024 அன்று மாலை 4.48 முதல் 17.10.2024 அன்று மாலை 4.20 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்ப உறவுகளிடம் பழைய கதையைப் பேசி வம்பை வளர்க்காமல் இருந்தால் மன நிம்மதி நிலைக்கும். சிலருக்கு தேவையற்ற பயணங்கள் உண்டாகும். சிவ வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406