துலாம் - தமிழ் மாத ஜோதிடம்

2024 புரட்டாசி மாத ராசிபலன்

Published On 2024-09-17 08:26 GMT   |   Update On 2024-09-17 08:28 GMT

சாமர்த்தியமாக பேசி சமாளிக்கும் துலாம் ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே இந்த மாதம் விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் போன்றவை எதிர்பார்த்தபடி அமையும்.

அஷ்டமத்தில் குரு இருப்பதால் ஆரோக்கிய சீர்கேடும், அலைச்சலும் அதிகரிக்கும். எதையும் ஒரு முறைக்கு இரு முறை செய்யும் சூழ்நிலை உருவாகும். உங்களுக்கோ உங்கள் குடும்பத்தை சார்ந்தவர் களுக்கோ, மருத்துவத்திற்காக ஒரு பெரும் தொகையை செலவிட வேண்டிய நிலை ஏற்படும்.

சனி வக்ரம்

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ர இயக்கத்தில் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. சுகக் கேடுகளும், வைத்திய செலவும் அதிகரிக்கும்.

துணிவும் தன்னம்பிக்கையும் குறையும். எந்த காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய இயலாது. கடின உழைப்புக்கு பிறகே காரியங்களில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை விற்று, புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சனி பகவானுக்குரிய சிறப்பு தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது.

புதன் உச்சம்

புரட்டாசி 3-ந் தேதி, கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் உச்சம் பெறும் இந்த நேரத்தில், விரயங்களும், பயணங்களும் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் சம்பள உயர்வின் காரணமாக, ஒரு சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியூர் சென்று வேலை பார்க்கும் சூழ்நிலை உருவாகும். வெளிநாடு அல்லது வெளிமாநிலம் சென்று பணிபுரிய அழைப்புகள் வரலாம். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும்.

துலாம் - சுக்ரன்

புரட்டாசி 3-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் வருகிறார். அது சுக்ரனுக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்ரன், உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது ஒரு யோகமான நேரமாகும். குடும்ப முன்னேற்றம் கூடும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். பெண் களுக்கு பெருமை சேரும். தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய, புதிய வாய்ப்புகள் வந்துசேரும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரத்தைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

துலாம் - புதன்

புரட்டாசி 20-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் வருகிறார். அவர் அங்குள்ள சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். இக்காலம் ஒரு பொற்காலமாகும். சகோதர ஒற்றுமை பலப்படும். தனவரவு தாராளமாக வந்துசேரும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள்.

படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கை துணைக்கு வேலை கிடைத்து, குடும்பத்திற்கு உதிரி வருமானம் கிடைக்கப்பெறும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து மகிழ்ச்சிப்படுத்தும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மனக்குழப்பம் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு, போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் உண்டு.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தற்காலிகப் பணி, நிரந்தர பணியாக மாறுவதில் குறுக்கீடுகள் வரலாம். கலைஞர்களுக்கு இடமாற்ற சிந்தனைகள் உருவாகும். மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பச் சுமை கூடினாலும், அதை சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

செப்டம்பர்: 17, 18, 25, 30, அக்டோபர்: 1, 6, 7, 8, 12, 13.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.

Similar News