ரிஷபம் - வார பலன்கள்

வார ராசிபலன் (25.8.2024 முதல் 31.8.2024 வரை)

Published On 2024-08-26 01:56 GMT   |   Update On 2024-08-26 01:58 GMT

25.8.2024 முதல் 31.8.2024 வரை

கடந்த காலத்தில் நிறைவேறாத சில எண்ணங்கள் ஈடேறும். ராசி அதிபதி சுக்ரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீசம் பெற்று கேதுவுடன் இணைந்து குரு, செவ்வாய் பார்வை பெறுகிறார். வசீகரமான தோற்றப் பொழிவு உண்டாகும். உங்களின் முன்னேற்றம் ஆச்சரியப்படும் விதத்தில் இருக்கும். உடலில் இருந்த பிணிகள் ஓடி ஒளியும். தடை கற்கள் படிக்கற்களாக மாறும். இழுபறியாக கிடந்த அனைத்து விசயங்களும் சாதகமாகும். தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் புரிபவர்களுக்கு அபாரமான வாய்ப்புகள் உள்ளது. சிலருக்கு குலத் தொழிலில் இருந்து விடுபட்டு வேறு தொழில் செய்யும் ஆர்வம் அதிகமாகும்.

குரு தீட்சை, ஆன்மீகப் பெரியோர்களின் ஆசி கிட்டும். பணி நிரந்தரம் இல்லாத பெண்களுக்கு நிரந்தர பணி நியமன ஆணை வரும். மருத்துவ சிகிச்சை வெற்றி தரும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். தாய் வழிச் சொத்தை பிரிப்பதில் இருந்த குறுக்கீடுகள் அகலும். அடகு வைத்த நகைகளை, சொத்துக்களை மீட்க சந்தர்ப்பம் கூடி வரும். எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். வீடு கட்டும் பணி துரிதப்படுத்தப்படும். அவல் பாயாசம் படைத்து கிருஷ்ணரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News