ரிஷபம் - வார பலன்கள்

வார ராசிபலன் (29.9.2024 முதல் 5.10.2024 வரை)

Published On 2024-09-30 02:12 GMT   |   Update On 2024-09-30 02:13 GMT

29.9.2024 முதல் 5.10.2024 வரை

அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும் யோகமான வாரம். 2,5-ம் அதிபதி புதன் குரு, செவ்வாய் பார்வையில் உச்சம் பெற்று இருப்பதால் குடும்ப உறவுகளிடையே நிலவி வந்த சங்கடங்கள் மறையும். பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும். அடிப்படைத் தேவைகளுக்கு திணறியவர்களுக்கு கூட சரளமான பண புழக்கம் உண்டாகும். பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல வாபத்தை பெற்றுத்தரும், பத்திரிக்கை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்ய உகந்த காலம்.

முன்னோர்களின் நல்லாசியும், குல தெய்வ அருளும் கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்க ளுக்கு மதிப்பு, மரியாதை உயரும். பண வரவு அமோகமாக இருக்கும்.வீடு கட்டப் போட்ட பட்ஜெட் திட்டமிடுதலை விட எகிறும். பிள்ளைகளின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும். இழந்த பதவி தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. பூர்வீகச் சொத்தில் நிலவி வந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும்.புத்திர பிராப்த்தம் சித்திக்கும். காதல் திருமண முயற்சி நிறைவேறும்.உடல் நிலை தெளிவு பெறும். அமாவாசையன்று கோ பூஜை செய்யவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News