சினிமா செய்திகள்

பார்த்திபன்

உருண்டு வழியும் கண்ணீரில் வடிவேலுவின் தாயார் மறைவு.. இரங்கல் தெரிவித்த பார்த்திபன்..

Published On 2023-01-19 11:41 GMT   |   Update On 2023-01-19 11:41 GMT
  • மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார்.
  • இவரது மறைவிற்கு வருத்தம் தெரிவித்து பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். மதுரை விரகனூரில் வசித்து வந்த 87 வயதாகும் சரோஜினி வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில், வடிவேலுவின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "உலகமே சிரித்து மகிழ காரணமான ஒருவரின் கண்களில் உருண்டு வழியும் கண்ணீரில் அவரின் தாயார் மறைவு. திரு வடிவேல் அவர்கள் தன் மீளா துயரிலிருந்து விரைவில் ஆறுதல் பெற விரும்பும் நண்பர்களில் நானும் ஒருவனாக!" என்று பதிவிட்டுள்ளார்.


Tags:    

Similar News