கிரிக்கெட்

மும்பை, டெல்லி மைதானங்களில் பட்டாசு வெடிக்க தடை- பிசிசிஐ உத்தரவு

Published On 2023-11-01 05:41 GMT   |   Update On 2023-11-01 05:41 GMT
  • மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா-இலங்கை அணிகள் நாளை மோதுகின்றன.
  • ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் (நவம்பர் 7), முதல் அரை இறுதி ஆட்டமும் (நவம்பர் 15) அங்கு நடக்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது மும்பை, டெல்லியில் பட் டாசு வெடிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்து உள்ளது. காற்று மாசு காரணமாக இந்த இரு நகரங்களிலும் எஞ்சிய போட்டிகளின் போது வான வேடிக்கை நிகழ்த்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா-இலங்கை அணிகள் நாளை மோதுகின்றன. ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் (நவம்பர் 7), முதல் அரை இறுதி ஆட்டமும் (நவம்பர் 15) அங்கு நடக்கிறது. டெல்லியில் ஒரே ஒரு ஆட்டம் நடைபெற உள்ளது. இலங்கை-வங்காளதேசம் அணிகள் 6-ந்தேதி அங்கு மோதுகின்றன.

Tags:    

Similar News