கிரிக்கெட்

ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Published On 2024-09-06 13:33 GMT   |   Update On 2024-09-06 13:33 GMT
  • ஐபிஎல் ஏலத்திற்கு முன் பல்வேறு அணிகள் தங்களது அணிகளில் அதிரடி மாற்றங்களை செய்துவருகிறது.
  • பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளின் தலைமை பயிற்சியாளர்கள் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

புதுடெல்லி:

இந்தியாவில் இந்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்று அசத்தியது.

இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டிற்கான ஐ.பி.எல். தொடர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டன. அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற உள்ளதால் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

ஐ.பி.எல். ஏலத்திற்கு முன் பல்வேறு அணிகளும் தங்களது அணிகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. ஏற்கனவே பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் அடுத்த சீசனுக்கு முன் தங்களது அணிகளைச் சேர்ந்த தலைமை பயிற்சியாளர்களை அந்தப் பதவியில் இருந்து நீக்கியது.

இதேபோல், ராஜஸ்தான் அணி தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து குமார் சங்ககரா விலக உள்ளதாகவும், டிராவிட் அந்தப் பதவிக்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரும், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த தகவலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News