கிரிக்கெட்

திருச்சி அணிக்கு எதிராக 198 ரன்கள் குவித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

Published On 2024-07-22 15:30 GMT   |   Update On 2024-07-22 15:30 GMT
  • ஜெகதீசன் 51 ரன்னிலும் சந்தோஷ் குமார் 56 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
  • திருச்சி தரப்பில் ராஜ்குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நெல்லை:

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜெகதீசன் - சந்தோஷ் குமார் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தனர். 51 ரன்கள் எடுத்த போது ஜெகதீசனும் 56 ரன்களில் சந்தோஷ் குமாரும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் அப்ராஜித் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதனை தொடர்ந்து வந்த டேரில் ஃபெராரியோ தொடக்க முதலே அதிரடியாக விளையாடினார். இதனால் 15 பந்தில் 30 எடுத்து அவுட் ஆனார். இதில் 3 சிக்சர்களும் 1 பவுண்டரியும் அடங்கும்.

இதனையடுத்து பிரதோஷ் ரஞ்சன் பால்- அபிஷேக் தன்வர் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் குவித்தது. பிரதோஷ் ரஞ்சன் பால் 29 ரன்னிலும் அபிஷேக் தன்வர் 26 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். திருச்சி தரப்பில் ராஜ்குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Tags:    

Similar News