கிரிக்கெட்

முதல் ஒருநாள் போட்டியில் டிராவிஸ் ஹெட் சதம்: இங்கிலாந்தை அசால்டாக வென்ற ஆஸ்திரேலியா

Published On 2024-09-19 18:44 GMT   |   Update On 2024-09-19 18:58 GMT
  • முதலில் ஆடிய இங்கிலாந்து 315 ரன்கள் எடுத்தது.
  • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 44 ஓவரில் வெற்றி பெற்றது.

நாட்டிங்காம்:

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டி நாட்டிங்காமில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அதிரடியாக ஆடி 315 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 95 ரன்னிலும், வில் ஜாக்ஸ் 62 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஹாரி புரூக் 39 ரன்னும், ஜேமி சுமித் 23 ரன்னும், ஜேக்கப் பெத்தேல் 35 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய சார்பில் மார்னஸ் லாபுசாக்னே, ஆடம் ஜம்பா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் 10 ரன்னிலும், ஸ்மித், கேமரூன் கிரீன் தலா 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதிரடியாக் ஆடிய டிராவிஸ் ஹெட் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவருக்கு லபுசாக்னே ஒத்துழைப்பு கொடுத்தார். 4-வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 148 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

இறுதியில், ஆஸ்திரேலியா 44 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. டிராவிஸ் ஹெட் 129 பந்தில் 5 சிக்சர், 20 பவுண்டரி உள்பட 154 ரன்னும், லபுசாக்னே 61 பந்தில் 77 ரன்னும் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Tags:    

Similar News