கிரிக்கெட் (Cricket)

ஓய்வு முடிவை அறிவித்தார் நியூசிலாந்து அதிரடி வீரர் கொலின் முன்ரோ

Published On 2024-05-11 01:28 GMT   |   Update On 2024-05-11 01:28 GMT
  • ஒரு டெஸ்ட், 57 ஒருநாள், 65 இருபது ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணிக்காக விளையாடி 3 ரன்கள் அடித்துள்ளார்.
  • டி20 கிரிக்கெட்டில் 47 பந்தில் சதம் விளாசியுள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி இடக்கை பேட்ஸ்மேனான கொலின் முன்ரோவுக்கு, அடுத்த மாதம் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2012-ம் ஆண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.

கடைசியாக அவர் 2020-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடி இருந்தார்.

37 வயதான முன்ரோ ஒரு டெஸ்ட், 57 ஒருநாள், 65 இருபது ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணிக்காக விளையாடி 3 ரன்கள் அடித்துள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் 428 இருபது ஓவர் போட்டியில் விளையாடி 5 சதம் உள்பட 10,961 ரன்கள் குவித்துள்ளார்.

2016-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் 14 பந்துகளில் அரைசதம் அடித்து வேகமாக அரைசதம் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்ற முன்ரோ, 2018-ம் ஆண்டு 47 பந்துகளில் சதம் அடித்தது (வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக) அந்த சமயத்தில் 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து வீரரின் அதிவேக சதமாக பதிவானது. நியூசிலாந்து அணிக்காக டி20 போட்டிகளில் 3 சதங்கள் அடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும், பல்வேறு நாடுகளில் நடைபெறும் 20 ஓவர் லீக் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் என்று முன்ரோ தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கெதிராக விளையாடியது என்னுடைய விளையாட்டு வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என கொலின் முன்ரோ தெரிவித்துள்ளார்.

2014 மற்றும் 2016 டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி, 2019 50 ஓவர் உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News