கிரிக்கெட்

துபாயில் E8 நாக்அவுட் கிரிக்கெட் போட்டி- திட்டச்சேரி எம்சிசி அணி வெற்றி

Published On 2023-03-07 11:38 GMT   |   Update On 2023-03-07 11:38 GMT
  • இறுதிப் போட்டியில் திட்டச்சேரி எம்சிசி அணியினரும், சூப்பர் ஸ்டைக்கர்ஸ் அணியினரும் மோதினர்.
  • நிறைவு விழா ஈமான் தலைவர் பிஎஸ்எம் ஹபிபுல்லா கான் தலைமையில் நடைபெற்றது

துபாய்:

துபாய் ஈமான் கலாச்சார மையம் சார்பில் E8 நாக்அவுட் கிரிக்கெட் போட்டி துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள கோல்டை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்டு அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் திட்டச்சேரி எம்சிசி அணியினரும், சூப்பர் ஸ்டைக்கர்ஸ் அணியினரும் மோதினர். இதில் திட்டச்சேரி எம்சிசி அணியினர் வெற்றி பெற்று கோப்பையை வென்றனர்.

நிறைவு விழா ஈமான் தலைவர் பிஎஸ்எம் ஹபிபுல்லா கான் தலைமையில், பொதுச் செயலாளர் ஹமீது யாசின் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நவாஸ்கனி எம்பி, லீப் ஸ்போர்ட்ஸ் ரமேஷ், கிரீன் குலோப் ஜாஸ்மின், மனநல ஆலோசகர் பஜிலா ஆசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளையாட்டு மைதானத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஈமான் அமைப்பின் சார்பில் அஸ்கர், சமீர், சேக், யாகூப், ஹாஜா அலாவுதீன், ஹாஜி, நிஜாம், ஜலால், தமீம், ஜமால்தீன், சமீம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News