கிரிக்கெட் (Cricket)

ஐபிஎல் தொடரில் ரீ என்ட்ரி கொடுக்கும் ராகுல் டிராவிட்

Published On 2024-07-23 09:07 GMT   |   Update On 2024-07-23 09:07 GMT
  • நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது.
  • ஐ.பி.எல் தொடரில் இந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராகுல் டிராவிட் கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டு ஐ.பி.எல் தொடர்களில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News