கிரிக்கெட்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராகிறார் வாசிம் ஜாபர்

Published On 2024-07-26 14:35 GMT   |   Update On 2024-07-26 14:35 GMT
  • 46 வயதான வாசிம் ஜாபர் இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளிலும், 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
  • 2019 முதல் 2021 வரை ஏற்கனவே பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பெய்லிஸ் இருந்து வந்தார். அவருடைய இரண்டு வருட ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் வாசிம் ஜாபரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க பஞ்சாப் அணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

46 வயதான வாசிம் ஜாபர் இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளிலும், 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2019 முதல் 2021 வரை ஏற்கனவே பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார். 2022 ஐபிஎல் ஏலத்திற்க முன்னதாக பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார்.

2014-ல் இருந்து பஞ்சாப் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது கிடையாது, 2024 சீசனில் 262 இலக்கை எட்டி, ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்னை சேஸிங் செய்த அணி என்ற பெருமையை பெற்றது.

உலகக் கோப்பை வென்ற பயிற்சியாளராக பெய்லிஸ் இருந்தார். மேலும் இரண்டு முறை கேகேஆர் கோப்பையை வென்றபோது பயிற்சியாளராக இருந்துள்ளார். ஆனால் பஞ்சாப் அணிக்காக அவரால் கோப்பை வென்று கொடுக்க முடியவில்லை.

Tags:    

Similar News