கிரிக்கெட் (Cricket)

என்னை பயமுறுத்திய பந்து வீச்சாளர் இவர்தான்- ரோகித் ஓபன் டாக்

Published On 2024-05-15 12:30 GMT   |   Update On 2024-05-15 12:30 GMT
  • நான் பேட்டிங் செய்ய வரும் முன்னர் அவரது பந்து வீச்சு வீடியோவை 100 முறை பார்த்து விட்டுதான் பேட்டிங் செய்ய வருவேன்.
  • அவர் ஒரு மிரட்டலான பந்து வீச்சாளராக இருந்தார்.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா துபாயில் உள்ள எப் எம் சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார்.

அதில், நீங்கள் சந்தித்ததில் கடினமான பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரோகித் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரை கூறினார்.

இது குறித்து ரோகித் கூறியதாவது:-

நான் பேட்டிங் செய்ய வரும் முன்னர் அவர் பந்து வீச்சு வீடியோவை 100 முறை பார்த்து விட்டுதான் பேட்டிங் செய்ய வருவேன். அவர்தான் தென் ஆப்பிரிக்கா வீரர் டேல் ஸ்டெய்ன். அவர் கிரிக்கெட்டின் ஜாம்பவான்.

மேலும் அவர் தனது வாழ்க்கையில் என்ன சாதித்திருக்கிறார் என்பதை பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது. நான் அவரை பலமுறை எதிர்கொண்டேன். அவரது பந்து வீச்சு வேகமாக இருக்கும். அதில் ஸ்விங்கும் செய்வார். அப்படி பந்து வீசுவது மிகவும் கடினமானது.

அவர் ஒரு மிரட்டலான பந்து வீச்சாளராக இருந்தார். அவர் அனைத்து போட்டி, சீசனிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடுவார். அவருக்கு எதிராக விளையாடியதில் மகிழ்ச்சியாக இருந்தது.

இவ்வாறு ரோகித் கூறினார்.

Tags:    

Similar News