ஆன்மிக களஞ்சியம்

3 நாள் உயிர் இல்லாத உடல்

Published On 2024-09-17 11:07 GMT   |   Update On 2024-09-17 11:07 GMT
  • பாபா உயிரோடு வந்ததைக் கண்ட பக்தர்களும் மக்களும் மகிழ்ச்சி கொண்டனர்.
  • பாபாவின் இந்தச் செயலால் பாபாவின் மகிமை மேலும் நாடு முழுவதும் பரவியது.

பாபா ஒரு நாள் தமது சீடர் மஸல்சாபதியுடன் பேசிக் கொண்டு இருந்தார்.

அப்போது மஹல்சாபதியிடம் நான் கடவுளைப் பார்த்துவிட்டு வர வேண்டும்.

நான் வரும் வரையில் எனது உடலை பத்திரமாக பாதுகாத்து வைத்திருங்கள் என்று கூறினார்.

நான் போய்வர மூன்று நாட்களாகும். மூன்று நாட்களில் திரும்பி வந்து நான் எனது உடலில் நுழைந்து உயிர் பெறுவேன் என்றும் பாபா கூறினார்.

மஹல்சாபதியும் அப்படியே ஆகட்டும் என்றார். பாபா சொன்னபடி அவரது உயிர் உடலைவிட்டுப் பிரிந்து சென்றது. உயிரில்லாத உடலை மஹல்சாபதி பாதுகாத்து வந்தார்.

இந்த விஷயம் எப்படியோ வெளியில் தெரிந்து மக்கள் அங்கே திரளாக கூடி விட்டனர்.

இது தொடர்பாக விசாரிக்க உயர் அதிகாரிகளும் வந்து விட்டனர்.

அதிகாரிகள் பாபாவின் உயிரற்ற உடலைப் பார்த்துவிட்டு, அவர் இறந்து விட்டார். எனவே அவரது உடலை அடக்கம் செய்து விடலாம் என்றனர்.

ஆனால் பாபாவின் சீடர் மஹல்சாபதி அதற்கு சம்மதிக்க வில்லை.

பாபாவின் அருள்வாக்கு இதுவரையிலும் பொய்யானதே இல்லை. அதனால் யாரும் அவரது உடலைத் தொட நான் அனுமதிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார்.

உயர் அதிகாரிகள் கோபம் கொண்டு, நீங்கள் சொன்னது போல் மூன்று நாள் கழித்து நான்காவது நாள் பாபா உயிர் பெறாவிட்டால் நாங்களே பாபாவின் உடலை அடக்கம் செய்து விடுவோம் என்று மஹல்சாபதியை எச்சரித்து விட்டுச் சென்றனர்.

மஹல்சாபதி சொன்னபடி மூன்று நாட்கள் கழிந்தன.

நான்காவது நாள் காலையில் எல்லோரும் பாபாவின் உடல் அருகே கூடி விட்டனர்.

அப்போது பாபா சொன்னபடியே அவரது உயிரற்ற உடல் உயிர் பெற்று எழுவதைக் கண்டனர்.

பாபா உயிரோடு வந்ததைக் கண்ட பக்தர்களும் மக்களும் மகிழ்ச்சி கொண்டனர்.

பாபாவின் இந்தச் செயலால் பாபாவின் மகிமை மேலும் நாடு முழுவதும் பரவியது.

Similar News