ஆன்மிக களஞ்சியம்

துவாரக மாயி (மசூதி)

Published On 2024-09-12 11:43 GMT   |   Update On 2024-09-12 11:43 GMT
  • நீ உட்கார்ந்திருக்கும் இடமே துவாரகா. இந்த மசூதி மாயி (அன்னை) அவள் மிகவும் அன்புள்ளம் கொண்டவள்.
  • அவள் மடியில் உட்கார்ந்திருக்கும் குழந்தைகளின் ஆபத்துகளையும், கவலைகளையும் தீர்க்கிறாள் என்று கூறினார்.

சீரடி கிராமத்தில் 60 ஆண்டுகள் பாபா வசித்த மசூதியே துவாரகமாயி என்பதாகும்.

கிருஷ்ண பகவானை தரிசிக்க துவாரகா செல்ல விரும்பிய ஒரு பக்தர், சீரடிக்கு சென்று பாபாவை தரிசித்து அவரிடம் துவாரகா செல்ல அனுமதி கேட்டார்.

அதற்கு பாபா துவாரகாவிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

நீ உட்கார்ந்திருக்கும் இடமே துவாரகா. இந்த மசூதி மாயி (அன்னை) அவள் மிகவும் அன்புள்ளம் கொண்டவள்.

அவள் மடியில் உட்கார்ந்திருக்கும் குழந்தைகளின் ஆபத்துகளையும், கவலைகளையும் தீர்க்கிறாள் என்று கூறினார்.

இம் மசூதி பாபாவினால் துவாரகமாயி என்று குறிப்பிடப்பட்டமையால் அன்றைய தினத்திலிருந்து இம்மசூதி துவாரகமாயி என்று அழைக்கப்படுகிறது.

Similar News