ஆன்மிக களஞ்சியம்
இரண்டாம் இராஜஇராஜ சோழனால் கட்டப்பட்ட தாராசுரம் சரபேஸ்வரர்
- தஞ்சை மாவட்டம், தாராசுரத்தில் ஐராவதேசுவரர் ஆலயத்தில் உள்ள சரபேஸ்வரர் வடிவம் தமிழகத்தின் இரண்டாவது சிறப்பாகும்.
- இந்த சரப மூர்த்திக்கு மேலே கூப்பிய கரங்களுடனான சிறிய உருவங்கள் சிலவும் காணப்படுகின்றன.
தஞ்சை மாவட்டம், தாராசுரத்தில் ஐராவதேசுவரர் ஆலயத்தில் உள்ள சரபேஸ்வரர் வடிவம் தமிழகத்தின் இரண்டாவது சிறப்பாகும்.
இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோவிலின் ராஜ கம்பீர மண்டபத்தின் மேற்குப்பக்கச் சுவரில் சரபேஸ்வரரின் அழகிய சிற்பம் உள்ளது.
இந்த சிற்பத்தில் சிங்கத்தின் முகத்தினையும், கிரீடம் அமைந்த தலையையும், விரிந்த இறகுகளையும் கொண்டு விளங்கும் சரப மூர்த்தியின் காலுக்கடியில் கூப்பிய கரங்களுடன் நரசிம்மர் காணப்படுகின்றார்.
இந்த சரப மூர்த்திக்கு மேலே கூப்பிய கரங்களுடனான சிறிய உருவங்கள் சிலவும் காணப்படுகின்றன.