ஆன்மிக களஞ்சியம்

சீரடியில் பார்க்க வேண்டிய இடங்கள்-கண்டோபா ஆலயம்

Published On 2024-09-11 11:27 GMT   |   Update On 2024-09-11 11:27 GMT
  • அப்பொழுது பாபாவை அன்புடன் வரவேற்று வருக சாயி என்று இன்முகத்துடன் வரவேற்றவர் மகல்சாபதி தான்.
  • சாயி பக்தர்கள் வரிசையில் முதன்மையான இடத்தை பெற்றவர் மகல்சாபதியே ஆவார்.

மஹாராஷ்டிர மக்களின் குலதெய்வமான கண்டோபா என்பவர் சிவபிரானின் அவதாரமாவார்.

சீரடிப் பேருந்து நிலையத்தின் அருகாமையிலேயே இந்தக் கோவில் அமைந்துள்ளது.

சீரடியின் சாயிபகவான் கால் பதித்தபோது முதன் முதலில் அவர் அன்பராகி அடியவராகி அவர் அகத்தில் முதன்மை இடம் பெற்ற மகல்சாபதி இந்த ஆலயத்தில் பூசாரியாக பணி புரிந்தவர் தான்.

சிலகாலம் சீரடியை விட்டு சென்ற பகவான், சாந்த்பாய் பட்டேல் குடும்பத்தின் திருமண கூட்டத்தோடு சீரடி நோக்கி வண்டியில் வந்த போது அவர் முதன் முதலில் இறங்கிய இடம் இதுவேயாகும்.

அப்பொழுது பாபாவை அன்புடன் வரவேற்று வருக சாயி என்று இன்முகத்துடன் வரவேற்றவர் மகல்சாபதி தான்.

சாயி பக்தர்கள் வரிசையில் முதன்மையான இடத்தை பெற்றவர் மகல்சாபதியே ஆவார்.

Similar News