ஆன்மிக களஞ்சியம்

காஷ்மீர் யாத்திரை

Published On 2024-09-03 10:54 GMT   |   Update On 2024-09-03 10:54 GMT
  • கோவில் காவல் பணிகளுக்கு பிள்ளையுறங்கா வில்லிதாசர் நியமிக்கப்பட்டார்.
  • கோவில் நிர்வாகப் பொறுப்புகளுக்கு முதலியாண்டான் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஸ்ரீ ஆளவந்தார் திருவுள்ளப்படி ஸ்ரீபாஷ்யம் என்கிற வேதாந்த நூல் எழுதி முடிக்கும் திருப்பணியில் கவனம் செலுத்த திருக்கோவிலில் முறையிட்டதும், ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீபாஷ்யம் நூலுக்காக காஷ்மீர் தேசம் செல்ல உத்தேசிக்கப்பட்டது.

காஷ்மீர் தேசத்தில் தான் ஸ்ரீபாஷ்யம் நூலுக்கான போதாயன சூத்திர விருத்தியுரை நூல் இருந்து வந்தது.

ஸ்ரீராமானுஜர் காஷ்மீர் தேசத்துக்கு செல்வதற்கு ஏதுவாக ஸ்ரீரங்கம் திருக்கோவில் கட்டளைகளை நிறைவேற்றி சில திட்டங்கள் வகுக்கப்பட்டன.

கோவில் காவல் பணிகளுக்கு பிள்ளையுறங்கா வில்லிதாசர் நியமிக்கப்பட்டார்.

கோவில் நிர்வாகப் பொறுப்புகளுக்கு முதலியாண்டான் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சகல பரிவார பரிபாலன மேற்பார்வை விசாரணைகளுக்கு அகளங்க சோழனும் மற்றும் நம்பிக்கைக்கு உரியவர்கள் நியமிக்கப்பட்டனர்.

ராமானுஜர் அதன்பின் தன் பயணத்திற்கு எப்பொழுதும் நிழலாக இருக்கும் கூரத்தாழ்வாரை துணையாக அழைத்துக் கொண்டு காஷ்மீர் பயணம் சென்றார்.

காஷ்மீரில் ராமானுஜர் பாண்டிதர்களைச் சந்தித்து வேதவேதாந்த விஷயங்கள் சம்பந்தமாக கலந்து உரையாடினார்.

ராமானுஜரது புலமையும் அறிவுக் கூர்மையும் வாக்கு வன்மையும் ஞான வேட்கையும் எல்லோரையும் பிரமிக்கச் செய்தன.

Tags:    

Similar News