ஆன்மிக களஞ்சியம்

காவேரி தாய் ஆரத்தி

Published On 2024-08-01 12:15 GMT   |   Update On 2024-08-01 12:15 GMT
  • நதிகள் பலவும் உன்னை வணங்கிட
  • பாவங்கள் போக்கிடுவாய், அம்மா பாவங்கள் போக்கிடுவாய்!

ஓம் ஜெய ஜெய காவேரி

அம்மா அன்னையே காவேரி!

அன்பினால் உனக்கு ஆரத்தி செய்தோம்

அன்னையே காவேரி. ஓம் ஜெய ஜெய காவேரி!!

(ஓம் ஜெய)

அகத்திய முனிவரின் தவத்தில் பிறந்தாய்

அன்னையே காவேரி, அம்மா அன்னையே காவேரி!

கணபதி அருளால் தரணியில் வந்தாய்

அன்னையே காவேரி, அம்மா அன்னையே காவேரி!!

(ஓம் ஜெய)

குடகினில் தோன்றி பூமியில் தவழ்ந்து

கடலினில் கலந்தாயே, அம்மா கடலினில் கலந்தாயே!

மாந்தர்கள் வணங்கிட வளம் பல தருவாய்

அன்னையே காவேரி, அம்மா அன்னையே காவேரி!!

(ஓம் ஜெய)

நதிகள் பலவும் உன்னை வணங்கிட

பாவங்கள் போக்கிடுவாய், அம்மா பாவங்கள் போக்கிடுவாய்!

நாங்களும் உன்னை வணங்கிட வந்தோம்

பாவங்கள் தீர்ப்பாயே ஓம் ஜெய ஜெய காவேரி!!

(ஓம் ஜெய)

உந்தன் கரைதனில் புனித தலங்கள்

தோன்றி வளர்ந்தனவே, அம்மா தோன்றி வளர்ந்தனவே!

பக்தியும் தவமும் பெருகி வளர்ந்திட

அருளினைத்தந்தாயே ஓம் ஜெய ஜெய காவேரி!!

(ஓம் ஜெய)

மாலையில் உனக்கு ஆரத்தி செய்தோம்

வளம்பெற அருள்வாயே, அம்மா வளம் பெற அருள்வாயே!

உன்னை வணங்கிட ஒன்றாய்ச் சேர்ந்தோம்

உயர்வினைத் தந்திடுவாய் ஓம் ஜெய ஜெய காவேரி!!

(ஓம் ஜெய)

Tags:    

Similar News