ஆன்மிக களஞ்சியம்
முதன்முதலில் அமைக்கப்பட்ட சரபேஸ்வரர் சிற்பம் உள்ள கோவில்
- சோழர்கள் ஆட்சி காலத்தில் தான் சரபேஸ்வரர் வழிபாடு அறிமுகமாகியது.
- சரப மூர்த்தி வடிவத்தினைக் கோவில்களில் அமைப்பதாலும் வழிபடுவதாலும் எதிரிகள் அழிக்கப்படுவார்கள்.
சோழர்கள் ஆட்சி காலத்தில் தான் சரபேஸ்வரர் வழிபாடு அறிமுகமாகியது.
சரப மூர்த்தி வடிவத்தினைக் கோவில்களில் அமைப்பதாலும் வழிபடுவதாலும் எதிரிகள் அழிக்கப்படுவார்கள்.
போர்களில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே சோழர்கள் சரபேஸ்வரர் வழிபாட்டினைத் துவங்கினார்கள்.
துக்காச்சி
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள துக்காச்சி என்ற ஊரில் உள்ள ஆபத்சகாயேசுவரர் கோவிலில் தான் முதன்முதலில் சரப மூர்த்தியின் சிற்பம் அமைக்கப்பட்டது.
விக்கிரம சோழன் (கி.பி.1118-1135) காலத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த கோவிலில் அமைக்கப்பட்ட சரபேஸ்வரர் சிலைதான் தற்போதுள்ள சரபேஸ்வரரின் வடிவங்களில் மிகப் பழமையானதாகும்.