பல மன்னர்களால் பல்வேறு காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட கோவில்
- திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பல மன்னர்களால் சிறந்த முறையில் பல்வேறு காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது.
- இந்த கட்டமைப்பானது உலகளவில் போற்றும்படி அமைந்துள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பல மன்னர்களால் சிறந்த முறையில் பல்வேறு காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது.
இந்த கட்டமைப்பானது உலகளவில் போற்றும்படி அமைந்துள்ளது.
கடந்த 1000 ஆண்டு காலமாக நடைபெற்ற வளர்ச்சிப்பணிகள் இக்கோவிலை மிக சிறந்த ஸ்தானத்திற்கு உயர்த்தியுள்ளது.
இந்த கோவிலை பற்றி தமிழ் இலக்கணத்தில் முன்னணி கவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், மற்றும் சம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் எழுதியுள்ள காவியங்கள் இன்றும் உலகளவில் புகழ் பெற்று விளங்குகிறது.
மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையாரை பற்றி ஒரு தமிழ் மகாகவியான அருணகிரிநாதர் அவருடைய படைப்பில் சிறப்பாக எழுதியுள்ளார்.
'திருப்புகழ்' என்ற மகா கவிதை இங்கு தான் எழுதி அற்பணிக்கப்பட்டது.
மற்றொரு தமிழ் கவிஞர் மகாகவி முத்துசாமி தீட்சிதர் இங்குதான் அவருடைய படைப்பான கீர்த்தி அருணாச்சலம் என்ற கவிதையை எழுதி வெளியிட்டார்.
இக்கோவிலில் இன்றைய காலகட்டத்தில் மொத்தமாக ஐந்து பிரகாரங்கள் உள்ளன
இந்த ஐந்து பிரகாரங்களிலுமே நந்திகள் அருணாச்சலரை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது.