சாதி வேறுபாட்டை ஒழிக்க பாடுபட்ட ராமானுஜர்
- இந்து சமயத்தில் புரையோடிக் கிடந்த சாதி வேறுபாட்டை ஒழிக்கப் பாடுபட்டவர் ராமானுஜர் "எந்தப் பிரிவினரும் வைணவத்தைத் தழுவலாம்.
- வைணவம் அனைவருக்கும் உரித்தானது" என்று அவர் அறிவித்தார்.
இந்து சமயத்தில் புரையோடிக் கிடந்த சாதி வேறுபாட்டை ஒழிக்கப் பாடுபட்டவர் ராமானுஜர் "எந்தப் பிரிவினரும் வைணவத்தைத் தழுவலாம்.
வைணவம் அனைவருக்கும் உரித்தானது" என்று அவர் அறிவித்தார்.
ஆசையுடையோர்க் கெல்லாம் வைணவ மகாமந்திரம் பொதுவானது. வைணவர் அனைவரும் ஒரே குலம் தொண்டர் குலம் என்றார் உடையவர்.
தாகம் தீர்த்தார்
சமயத் தொண்டில் மட்டுமின்றி சமூகத் தொண்டிலும் ராமானுஜர் ஆர்வம் காட்டினார்.
இவருடைய பொதுஜன சேவைக்கு மகுடம் இட்டாற்போலத் திகழ்வது மோதிதலாப் (முத்துக்குளம்) என்று அழைக்கப்படும் நீர்த்தேக்கம்.
தலைநகரின் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க இந்த நீர்த்தேக்கத்தை உருவாக்கம் திட்டத்தைத் தீட்டியவர் ராமானுஜர் தான்.
குன்றுகளுக்கு இடையே முக்கோண வடிவில் அமைந்த பள்ளத்தாக்கில் பாய்ந்து சென்ற சிற்றாற்றின் குறுக்கே ஓர் அணையைக் கட்டி நீர்நிலையை உருவாக்க வேண்டும் என்று விஷ்ணுவர்த்தன ராயனிடம் ராமானுஜர் எடுத்துரைத்தார்.
அதன்படியே நீர்த்தேக்கம் உருவானது.
இரண்டரை மைல் நீளமும் ஒரு மைல் அகலமும் கொண்ட இந்தப் பெரிய ஏரி இன்றும் கூட மக்களின் தாகத்தைத் தணித்து, ராமானுஜரின் புகழ் பாடுகிறது.