ஆன்மிக களஞ்சியம்

சாயிபகவான் தரணிக்கு வழங்கிய தத்துவச் சுடர்கள்

Published On 2024-09-12 11:51 GMT   |   Update On 2024-09-12 11:51 GMT
  • என்னுடைய லீலைகளையும் கதைகளையும் தொகுத்து சொல்லப்போனால் நான் உள் கருவியாய் இருந்து உதவுவேன்.
  • நீ வெளிக் கருவியாய் இயங்க வேண்டும்.

என்னுடைய லீலைகளையும் கதைகளையும் தொகுத்து சொல்லப்போனால் நான் உள் கருவியாய் இருந்து உதவுவேன்.

நீ வெளிக் கருவியாய் இயங்க வேண்டும்.

சுருங்கச் சொன்னால் என் வரலாற்றை நானே எழுதியது போல் உண்மையும் உயர்வும் தெய்வீகமும் உடையதாய் அமைய வேண்டும்.

எழுதுபவருக்கு தான் என்ற அகந்தை இருக்கக்கூடாது.

அகந்தை இன்றி எவன் என்னை நெருங்குகிறானோ அவனுக்கு நான் என்றும் நெருக்கமானவனாகவே இருப்பேன்.

என்னுடைய சரிதத்தையும் உபதேசங்களையும் படித்தால் பக்தர்கள் தம் மனங்களில் நம்பிக்கை வேரூன்ற பெற்று பேரின்ப நிலையை பெறுவார்கள்.

என் பக்தர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள். அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் எங்கு இருந்தாலும் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் துன்பப்பட கூடாது.

Similar News