ஆன்மிக களஞ்சியம்
சர்வ சித்திகளும் தரும் சாயிபகவான் சன்னிதி
- பாடல்கள் அனைத்தும் சாயிபகவானின் பாதச் சுவடுகள் பட்டவை.
- தெய்வீக மலர்கள், தேன் சொட்டும் கனிகள், பக்திப் பாசுரங்கள்.
இனிவரும் பாடல்கள் அனைத்தும் வசனமாகப் படித்து பகவானை வணங்கத்தக்க வகையிலும், இசை சித்தித்தவர்கள் அற்புதமாக பாடி பகவானை துதிக்க தக்க வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன.
பாடல்கள் அனைத்தும் சாயிபகவானின் பாதச் சுவடுகள் பட்டவை. தெய்வீக மலர்கள், தேன் சொட்டும் கனிகள், பக்திப் பாசுரங்கள்.
இவற்றை நினைத்தாலும் படித்தாலும் பாடினாலும் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். சாயி பகவானின் சர்வ சித்தியும் கிடைக்கும்.
சாயியை நினைக்க நிகைக்க,
அவர் நாமத்தைச் சொல்லச் சொல்ல
அவர் தெய்வீகத்தைப் படிக்கப் படிக்கப்
பாடப் பாட அவர் வருவார் அருள் தருவார்.