ஆன்மிக களஞ்சியம்
சிவராத்திரியில் தரிசிக்க வேண்டிய தலங்கள்-திருவண்ணாமலை
- ஆதி ஜோதி வடிவில் காட்சி கொடுத்ததைத்தான் கார்த்திகை தீபம் என்ற குறியீட்டால் விளக்குகிறார்.
- மகிமை மிக்க மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது.
பிரம்மனும் விஷ்ணுவும் அடிமுடி தேட அழல் மலையாய் நின்ற பெருமான் உலகம் உய்யும் பொருட்டு கல் மலையாகக் காட்சிக்கொடுத்த இடமே திருவண்ணாமலை.
அவரே அண்ணாமலையார்.
ஆதி ஜோதி வடிவில் காட்சி கொடுத்ததைத்தான் கார்த்திகை தீபம் என்ற குறியீட்டால் விளக்குகிறார்.
மகிமை மிக்க மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது.
இந்த நாளில்தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலையில் தோன்றினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாசிவராத்திரி நாளில் லிங்கோத் பவ காலம் என்று சொல்லப்படும் காலத்தில் சிவன் ஜோதி வடிவில் காட்சி கொடுத்தார் என்பார்.