ஆன்மிக களஞ்சியம்

ஸ்ரீ பிரத்தியங்கரா தேவி அன்னை உருவான வரலாறு

Published On 2024-08-13 10:57 GMT   |   Update On 2024-08-13 10:57 GMT
  • இதனை கண்ட தேவர்கள் அஞ்சி நடுங்கி பரமேஸ்வரனை தஞ்சமடைந்தனர். சிவ பெருமான் சரபேஸ்வரராக உருவெடுத்தார்.
  • சரபம் பாதி பறவை உருவத்தையும், பாதி காளி உருவத்தையும் கொண்ட பிரம்மாண்ட பறவை.

ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின்னரும் நரசிம்மரின் உக்கிரம் தணியவில்லை.

இதனை கண்ட தேவர்கள் அஞ்சி நடுங்கி பரமேஸ்வரனை தஞ்சமடைந்தனர். சிவ பெருமான் சரபேஸ்வரராக உருவெடுத்தார்.

சரபம் பாதி பறவை உருவத்தையும், பாதி காளி உருவத்தையும் கொண்ட பிரம்மாண்ட பறவை.

கூரிய நகங்களையும், பற்களையும் கொண்டது. சரபரும், நரசிம்மமும் சண்டையிட்டனர்.

நீண்ட நாட்கள் நீடித்தத சண்டையை முடிவுக்கு கொண்டு வர எண்ணிய சரபர் தனது இறக்கைகளில் ஒன்றாக இருந்த காளியை உக்ர பிரத்யங்காரா தேவியாக அவதாரமெடுக்க செய்தார்.

நரசிம்மத்தின் மூர்க்க குணமாக இருந்த கண்ட பெருண்டத்தை தன் வாயிலிட்டு விழுங்கினாள் தேவி.

நரசிம்மர் சாந்தமானார். தான் சிவ பெருமானுடன் சண்டையிட்டதை எண்ணி வருந்தி, சிவனை 18 ஸ்லோகங்களால் பாடினார்.

இந்த 18 ஸ்லோகங்களே சரபேஸ்வரரின் அஷ்டோத்திர நாமாக்கள்.

Tags:    

Similar News