ஆன்மிக களஞ்சியம்

ஸ்ரீ பிரத்தியங்கரா தேவியின் மூலமந்திரம்

Published On 2024-08-13 12:15 GMT   |   Update On 2024-08-13 12:15 GMT
  • சகல ஐஸ்வர்யங்களையும் உடையவர் என்பதால் சகல ஐஸ்வர்ய தாரின்யை என்று அழைக்கப்படுகிறாள்.
  • பக்தர்களுக்கு நவகிரகத்தின் சாரத்தில் இருந்து காப்பதால் நவகிரக ரூபிண்யை என்று அழைக்கப்படுகிறாள்.

ஓம் க்ஷம்

பக்ஷஜ்வாலா ஜிஹ்வே

கராள தம்ஸ்டரே

பிரத் யங்கிரே

க்ஷம் ஹரீம் ஹும்பட சுவாஹ என்பதாகும்.

ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியின் தியானம், பூஜை, உபாசனை விதிமுறை ஆகியவற்றை சித்திபெற்ற நற்குருவிடம் தெளிவாகப் பாடம் கேட்டுக் கொண்டு, குருவின் முன் அவர் தம் சந்நிதானத்தில் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பின் விதிமுறைகளை நன்கு தெரிந்துகொண்டு தனியாக பூஜைகளை ஆரம்பிக்க வேண்டும்.

மூலமந்திரம் சொல்லும் விதம்:

பிரணவத்தில் இருந்து விரிவடைந்திருக்கும் இந்தத் தேவியின் மூலமந்திரம் காயத்ரி மகா மந்திரம் சொல்லுவதுபோல் ஐந்து இடைவெளி விட்டுச் சொல்ல வேண்டும்.

ஓம் - என்ற பிரணவத்தை தீர்க்க ஸ்வரத்திலும் அடுத்த க்ஷம் என்பதை ஸ்வரித அதாவது குறுகிய ஸ்வரத்திலும் ஓம் -க்ஷம் என்று ஒரு இடைவெளியிலும் பக்ஷஸ்வாலா ஜிஹ்வே என்று இரண்டாவது இடைவெளியும் கராளதம்ஸ்ட்ரே என்று மூன்றாவது இடைவெளியும் பிரத்யங்கரே என்று நான்காவது இடைவெளியும், க்ஷம் கிரீம் ஹிம் பட்ஸ்வராகா என்று ஐந்தாவது இடைவெளியும் வைத்து ஒவ்வொரு இடைவெளிக்கும் இடைப்பட்ட காலம் மூன்று மாத்திரை நேரம் எனக் கொள்ளலாம்.

மூன்று மாத்திரை என்பது மூன்று வினாடிகள் என்று கொள்ளலாம்.

கருணை உள்ளம் கொண்ட இத்தேவியின் மூலமந்திர அக்ஷரத்தின் பிரணவ கலைகளைக் கூர்ந்து நோக்கினால், இதில் சம்ஹாரத் தைக் குறிக்கும் கலைக்கு இடமே இல்லை என்று கூறலாம்.

திருநாமங்கள்:

இதன் காரணமாக பிரத்தியங்கிராதேவி பல பெயரிலும் அழைக்கப்படுகிறாள்.

ஓங்கார ரூபிணியாக இருந்து விசுவ ரூபத்தில் திகழ்ந்து புத்தி முக்தியை அளிப்பதால் புத்தி முக்தி பலப்ராதாயை என்று அழைக்கப்படுகிறாள்.

சகல ஐஸ்வர்யங்களையும் உடையவர் என்பதால் சகல ஐஸ்வர்ய தாரின்யை என்று அழைக்கப்படுகிறாள்.

பக்தர்களுக்கு நவகிரகத்தின் சாரத்தில் இருந்து காப்பதால் நவகிரக ரூபிண்யை என்று அழைக்கப்படுகிறாள்.

Tags:    

Similar News