ஆன்மிகம்

புனித சந்தியாகப்பர் திருத்தல தேர்பவனி

Published On 2017-07-26 05:06 GMT   |   Update On 2017-07-26 05:06 GMT
திருச்சி பெரிய மிளகுபாறையில் புனித சந்தியாகப்பர் திருத்தலம் உள்ளது. இத்திருத்தல பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று இரவு நடந்தது.
திருச்சி பெரிய மிளகுபாறையில் புனித சந்தியாகப்பர் திருத்தலம் உள்ளது. இந்த திருத்தல பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 16-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று இரவு நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இன்று (புதன்கிழமை) காலை 6.15 மணிக்கு நன்றி திருப்பலி நடக்கிறது.
Tags:    

Similar News