ஆன்மிகம்

தவக்கால சிந்தனை : இரட்சண்ய நாள்

Published On 2019-04-08 03:43 GMT   |   Update On 2019-04-08 03:43 GMT
நமக்கு தேவன் கொடுத்த இந்த வாழ்வை இப்போதே ஆயத்தப்படுத்தி நமக்கு நித்தியமான வாழ்வு தரும் வழியை இப்போதே பயன்படுத்திக்கொள்வோம். ஆமென்.
காலம் கண் போன்றது, பொன் போன்றது, விலையேறப்பெற்றது என்று காலத்தை குறித்து நாம் சொல்லிக்கொண்டே போகலாம். இந்த காலத்தில் நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் சிந்தித்து பார்க்க வேண்டும். இன்றைய காலத்தில் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வேலைகளை செய்ய வேண்டுமானால் சோம் பேறிகளாக இந்த வேலையை நாளை செய்யலாம், அப்புறம் செய்து கொள்ளலாம் என்று நாட்களை கடத்திக்கொண்டே செல்கிறோம்.

இதே போல்தான் ஒரு பேராசிரியரிடம் மாணவன் ஒருவன் வந்து நான் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்வதை எவ்வளவு காலம் தள்ளிப்போடலாம் என்று கேட்டுள்ளான். உடனே அந்த பேராசிரியர் அந்த மாணவனை பார்த்து உன்னுடைய மரண நாளுக்கு முந்தைய நாள் வரை அதை தள்ளிப்போடலாம் என்று விநோதமான பதில் கூறியுள்ளார். உடனே அந்த மாணவன் நான் எப்போது மரிப்பேன் என்று தெரியாதே? என்று கூறியுள்ளான். உடனே பேராசிரியர் நம்முடைய மரணம் எப்போது? என்று யாருக்குமே தெரியாது அது உண்மைதான். எனவே இன்றே இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள தீர்மானம் செய் என்று கூறியுள் ளார்.

எனவே கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே காலத்தை தேவன் நமக்கு கொடுக்கும் தருணம் கடந்து விட்டதென்றால் திரும்பவும் பெற முடியாது. வாழ்க்கை வாழ்வதற்கே என்று மனம்போன போக்கில் வாழ்ந்து கொண்டு இயேசுவோடுகூட சிலுவையில் அறையப்பட்ட கள்ளனைப்போன்று கடைசி நிமிடத்தில் நாம் மனந்திரும்பிக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டிருக்கலாம்.

ஆனால் எத்தனையோ மக்கள் எதிர்பாராத வேளையில் தங்கள் மரணத்தை சந்திக்கின்றதை நாம் அனுதினமும் காண்கிறோம். இதைத்தான் வேதாகமத்தில் 2 கொரிந்தியர் 6-ம் அதிகாரம் 2-ம் வசனத்தில் இதோ இப்பொழுதே அனுக்கிரக காலம், இப்பொழுதே இரட்சண்ய நாள் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே நமக்கு தேவன் கொடுத்த இந்த வாழ்வை இப்போதே ஆயத்தப்படுத்தி நமக்கு நித்தியமான வாழ்வு தரும் வழியை இப்போதே பயன்படுத்திக்கொள்வோம். ஆமென்.

சகோ.சாம் கிப்ஸ்டன், காங்கேயம்.
Tags:    

Similar News