ஆன்மிகம்

அருள் பார்வையுடன் காட்சி தரும் லட்சுமி தேவி

Published On 2016-09-27 07:42 GMT   |   Update On 2016-09-27 07:43 GMT
மலரின் அழகு, அருள் பார்வையுடன் அழகாக காட்சி தருபவள் லட்சுமிதேவி விஷ்ணு பிரியை ஆவர்.
மலரின் அழகு, அருள் பார்வையுடன் அழகாக காட்சி தருபவள் லட்சுமிதேவி. செல்வத்தின் அதிபதியாக கருதப்படும் இவர், விஷ்ணு பிரியை. கிரியா சக்தியான லட்சுமிதேவி அமுதத்துடன் பாற்கடலில் இருந்து தோன்றியவள். அமுத மயமானவள். 

பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருப்பவள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டிக் கொண்டிருக்கும். செல்வ வளம் தந்து, வறுமையை அகற்றி அருள் புரிபவள். திருப்பதியில் உள்ள திருச்சானூரில் லட்சுமிக்கு தனிக் கோவில் அமைந்துள்ளது.

ஆதி லட்சுமி, மகா லட்சுமி, தன லட்சுமி, தானிய லட்சுமி, சந்தான லட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி, கஜ லட்சுமி ஆகிய 8 பேரும் அஷ்ட லட்சுமிகள் எனப்படுவர். இவர்கள் அனைவரும் லட்சுமி தேவியின் அம்சங்கள் ஆவர். 

Similar News