ஆன்மிகம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா

Published On 2018-05-30 08:00 GMT   |   Update On 2018-05-30 08:00 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் வடக்கு ரதவீதியில் உள்ள தெப்பக்குளத்தின் கரையில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் அம்மன் சப்பர வாகனத்தில் எழுந்தருளினார்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் நடந்தது. திருவிழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் காலையில் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆறாட்டு விழா நடந்தது. நள்ளிரவு அம்மன் தெப்பத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

கன்னியாகுமரி வடக்கு ரதவீதியில் உள்ள தெப்பக்குளத்தின் கரையில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் அம்மன் சப்பர வாகனத்தில் எழுந்தருளினார். தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால், குளத்தின் கரையில் தெப்பத்திருவிழா நடந்தது. அப்போது அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News