ஆன்மிகம்

மாதங்களும் - தீர்த்த ஸ்நான பலன்களும்

Published On 2018-10-12 08:24 GMT   |   Update On 2018-10-12 08:24 GMT
தாமிரபரணியில் எவ்விடத்தில் ஸ்நானம் செய்தாலும் பலன்கள் கிடைக்கும். என்றாலும் சில தீர்த்தங்களில் குறிப்பிட்ட மாதங்களில் ஸ்நானம் செய்ய சிறப்பு பலன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தாமிரபரணியில் எவ்விடத்தில் ஸ்நானம் செய்தாலும் பலன்கள் கிடைக்கும். என்றாலும் சில தீர்த்தங்களில் குறிப்பிட்ட மாதங்களில் ஸ்நானம் செய்ய சிறப்பு பலன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சித்திரை மாதம் - பாபவிநாசம், அஷ்டாட்சரம் பஞ்சாட்சரம் ஜெபித்து ஸ்நானம் செய்தால், ராஜசூய யாகம் செய்த பலனை அடையலாம்.

வைகாசி மாதம் - அத்தாழநல்லூர் - துவாதசி அல்லது சிரவண துவாதசி ஸ்நானம் செய்தால் குருத்துரோக தோஷம் நிவர்த்தி ஆகும்.

ஆனி மாதம் - சோம தீர்த்தம் - சுக்கிலபட்ச துவாதசியில் ஸ்நானம் செய்தால் பரோபகாரம் செய்த பலனை அடையலம்.

ஆடி மாதம் -
பாண தீர்த்தம் - அமாவாசை ஸ்நானம். சோம யாகம் செய்த பலனை அடையலாம்.

ஆவணி மாதம் - சிந்துபூந்துறை, பௌர்ணமி ஸ்நானம் செய்தால் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும்.

புரட்டாசி மாதம் - ஸ்ரீவைகுண்டம் - சுக்லபட்சம் அல்லது துவாதசியில் ஸ்நானம் செய்தால், ஆயிரம் வாஜபேய யாகம் செய்த பலன். இம்மாதத்திலேயே விஜயதசமியில் கௌரீ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்ய பூதானம் செய்த பலனைப் பெறலாம்.

ஐப்பசி மாதம் - துர்க்கா தீர்த்தத்தில் சுக்ல பட்சம் அல்லது நவராத்திரியில் ஸ்நானம் செய்தால் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும்.

கார்த்திகை மாதம்:
தாம்ரா சங்கமத்தில் பவுர்ணமி தினம் ஸ்நானம் செய்ய ஆயிரம் கோதானம் (பசுதானம்) செய்த பலனைப் பெறலாம்.

மார்கழி மாதம்: வியாச தீர்த்தத்தில் ஸ்நானம் செய்ய வேதங்கள் முழுவதையும் பாராயணம் செய்த பலனைப் பெறலாம். இம்மாதம் ஆழ்வார் திருநகரியில் சுக்லபட்ச துவாதசியில் ஸ்நானம் செய்தால் கோடி காராம்பசுக்களைத் தானம் செய்த பலனைப் பெறலாம். இவ்விடத்தில் உள்ள அனைத்து தீர்த்தங்கள் சிறப்பு பெற்றவை.

தை மாதம்: புடார்ச்சுனத்தில் பவுர்ணமியில் ஸ்நானம் செய்தால் பரமபதத்தை அடையலாம். இம்மாதத்தில் மகர தீர்த்தத்தில் சுக்லபட்சத்தில் ஸ்நானம் செய்ய நூறு கன்னிகாதானம் செய்த பலனைப் பெறலாம்.

மாசி மாதம்: சோமாரண்யத்தில் சிவராத்திரி அல்லது பவுர்ணமி யில் ஸ்நானம் செய்தால் கோடி காராம்பசுக்களைத் தானம் செய்த பலனைப் பெறலாம். இம்மாதத்தில் ஷ்ணுவனத்தில் (சீவலப்பேரி) சுக்கில ஏகாதசி, துவாதசியில் ஸ்நானம் செய்தால் மகாவிரதங்களை அனுசரித்த பலனைப் பெறலாம். இம்மாதத்தில் ஆழ்வார் திருநகரியில் துவாதசியில் ஸ்நானம் செய்தால் ஆயிரம் அந்தணக் குடும்பங்களைக் காப்பாற்றிய பலனைப் பெறலாம்.

பங்குனி மாதம்: சியாமா நதியின் (பச்சையாறு) சங்கமத்தில் அமாவாசை அன்று ஸ்நானம் செய்தால் சகல பாவங்களும் நிவர்த்தியாகும். இம்மாதத்தில் மநங்திரதீர்த்தத்தில் ஸ்நானம் செய்தால் ஆயிரம் அந்தணக் குடும்பங்களை காப்பாற்றிய பலனைப் பெறலாம். இம்மாதம் கலச தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ராமபாத தீர்த்தத்தில் ஸ்ரீராமநவமி அல்லது ரோகிணி நட்சத்திரத்தில் ஸ்நானம் செய்ய சகர பாவ தோஷங்களும் நீங்கும்.
Tags:    

Similar News