ஆன்மிகம்

ரெங்கநாதரின் காலைப் பொழுது..

Published On 2019-01-04 08:18 GMT   |   Update On 2019-01-04 08:18 GMT
ஸ்ரீரங்கம் ஆலயத்தின் கதவு காலை வேளையில் திறக்கப்படும் போது, சன்னிதி முன்பாக ஒரு பசுவும், யானையும் எதிர் எதிர் திசையில் நிறுத்தி வைக்கப்படும். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
திருமாலின் 108 திவ்ய தேசங்களில் பெருமை வாய்ந்தது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயம். இந்த ஆலயத்தின் கதவு காலை வேளையில் திறக்கப்படும் போது, பெருமாளின் சன்னிதி முன்பாக ஒரு பசுவும், யானையும் எதிர் எதிர் திசையில் நிறுத்தி வைக்கப்படும்.

அப்போது ரங்கநாதரின் சன்னிதியில் இருக்கும் ஐந்து பாத்திரங்களில் கொள்ளிடத்தில் இருந்து எடுக்கப்பட்ட நீர் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும். தொடர்ந்து பாடல்களின் வாயிலாக ரங்கநாதரை துயில் எழுப்புவார்கள்.

பின்னர் இறைவனின் சன்னிதியில் திரையிட்டிருக்கும் திரை விலக்கப்படும். லட்சுமியின் அம்சமான பசு மற்றும் யானையைப் பார்த்து, அன்றைய பொழுதை ரங்கநாதர் தொடங்குவதாக ஐதீகம்.
Tags:    

Similar News